பார்த்த,படித்த செய்திகள்

வேதாத்திரிய ஆன்மீகம்

Saturday, August 20, 2016

19Aug-1"வேதாத்திரிய ஆன்மீகம் -கேள்விக்கு பதில் "
கேள்வி :
   மதங்களிலும் யோகாவிலும் கடவுளைத்தான் வணங்குகிறோம்.இரண்டிலும் தர்மநெறிகளும்,ஒழுக்க பழக்கங்களும்தான் போதிக்கப்படுகின்றன! யோகாவை மதம் கடந்த ஆன்மீகம் என்று எதனால் கூறுகிறோம்?
பதில்:
   மதங்களில், மதத்தலைவர்கள் சொல்லிவைத்த கடவுளை சுயமாக சிந்தித்து அறியாமல் நம்பி, புறச்சடங்குகள் மூலம் வணங்குகிறோம். மதங்கள் கூறும் அறநெறிகளை, ஓரளவு அறிந்த அளவிலும் இயன்ற அளவிலும் தான் கடவுளுக்குப் பயந்து கடைப்பிடித்து வாழ முடிகிறது. ஆகையினால்தான் பக்தர்களின் வாழ்வில் இன்பமும் இருக்கிறது, துன்பமும் இருக்கிறது,  கவலையும் இருக்கிறது.
   யோகாவில் உடலுக்கு உடற்பயிற்சியும், உயிருக்கு வித்துக்குழம்பை பதங்கப்படுத்தும் காயகல்பப்பயிற்சியும், மனதுக்கு அகத்தவப் பயிற்சியும் அளித்து, குரு உபதேசிக்கும் கடவுள் தத்துவத்தையும் அறநெறிகளையும் சுயமாக சிந்தித்து, கடவுளை தெளிவாகவும், அறநெறிகளை முழுமையாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.
    யோகாவில் வேதங்கள் கூறும் உள்ளதை(கடவுளை) உணர்ந்து, நல்லதை(அறத்தை)செய்து, அல்லதை(தீயசெயல்களை)விட்டு, துன்பமும் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.         
       இதனால்தான் யோகாவை  அனைத்து மதங்களுக்கும் பொதுவான, மேலான ஆன்மீகம் என்கிறோம்.
  "அறத்தான் வருவதே இன்பம்" என்கிறார் திருவள்ளுவர்.
  
      மகிழ்ச்சியாகவாழ மனவளக்கலை (Sky) யோகா.
        வாழ்க வளமுடன்

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP