பிராணாயாமங்களிலும்
பல வகை
சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச்
செய்யும்.
உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும்.
பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது.
நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல்.
பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல்.
சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல்.
மேல் உடலைத்
தூய்மையாக்கும்.
மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல்.
கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல்.
பிராணாயாமத்துக்கான
எளிய பயிற்சிகள்
நாடி சுத்தீ
நாடிகள் அழுக்குகளால்
அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு,
சமானு என்ற
இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன்
மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.
பிராணாயாமத்தின் பொதுவான
அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே
ஒரு பிராணாயாமம் தினமும்
பழகினாலும் போதும்.
செய்முறைகள்:
1 முதலில் கால்களைக் குறுக்காகப்
போட்டுப் பத்மாசனத்தில் அமரவும்.
கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின்
பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப்
பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும். இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக
ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே,
அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே
விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு
சுற்று.
பிறகு, வலது மூக்கைத் திறந்து
மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின்
வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே
மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும்
12 முறை
செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும்
போதும் 'ஓம்’ அல்லது
ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்
முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில்
இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு
சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.
இந்தப் பயிற்சியில் உள்ளே
மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப்
பழகலாம்.
பலன்கள்: இது மூச்சை
ஒழுங்குப்படுத்தும். இதனால் மூச்சளவு ஒரே
சீராகி, நாள்பட்ட நோய்களையும்
தீர்க்கும். உடலில் பலமும் கூடும்.
2 இரு மூக்குத் துளைகளின் மூலமும்
முடிந்த அளவுக்கு
மூச்சை
ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து,
நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள்
மூலமும் மூச்சை
வெளியே
விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு
சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம்.
இதிலும் கும்பகம் இல்லை.
3உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ
அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத் துளையை வலப் பெருவிரலால் மூடி,
மூக்கின்
இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே
முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம். இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச்
செய்வதே சிறப்பு.
4நாற்காலி, சோபாவில் வசதியாக
அமர்ந்துகொள்ளுங்கள். இரு
மூக்குத்
துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே
நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது
எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல்,
நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட
விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது,
முழுவதும்
வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை
மட்டுமே அடக்குதலும் உண்டு.
பலன்கள்: ரத்த ஓட்டம்
சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு,
ஒருங்கிணைப்பு
உண்டாகும். மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி
தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.
சீத்காரி
இதற்கு 'குளிரானது’ என்று பொருள். செய்வது மிகவும் எளிது. இந்தக் கோடை காலத்தில்
இதைச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளலாம்.
ஏதேனும் ஓர் ஆசனம் போட்டு
அமருங்கள். இரு வரிசைப்
பற்களையும், சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
வாய்க்குள் நாக்கை மேலண்ணத்தில் ஒட்டியவாறு கொஞ்சம்
மடித்துக்கொள்ளுங்கள். 'இஸ்ஸ்ஸ்...’ என்று காற்றை வாய்வழியே உள்ள பல் இடுக்கு
வழியாக உறிஞ்சவேண்டும். முடிந்தவரை கும்பகம் செய்யலாம்.
காரம் நாவில் பட்டதும், அல்லது ஜில்லென ஐஸ் பட்டால் 'ஸ்..ஸ்’ என்று காற்றை இழுப்பது போலத்தான்.
பிறகு, மெள்ள மூக்கின் வழியே காற்றைச் சீராக வெளியேற்றுங்கள்.
வாயால் இழுத்து மூக்கால் வெளிவிடுவதால், முடிந்தவரை பற்கள்
ஒன்றாக சேர்ந்தபடி இருக்கவேண்டும். கும்பகம் செய்யும்போது நாக்கின் நுனி
மேலண்ணத்தில் தொட்டு அமுத்தியிருக்கவேண்டும். காலை, மாலையில் 10 முறை செய்யப்
பழகுங்கள்.
சவாசனத்தில்
பிராணாயாமம்
இது உடல்
முழுவதுக்குமான பிராணாயாமம்.
சூடு இல்லாத சமமான ஒரு
தரையில் விரிப்பைப் போட்டு,
தரையில்
முதுகு படும்படி மல்லாந்து படுங்கள். கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல்
உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம்.
பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து
இருக்கட்டும்.
அகலமாக
இருந்தால் கட்டிலில் கிடந்து இதைப் பண்ணலாம்.
இரு மூக்குத் துளைகள்
மூலமாக ஓசையின்றி மூக்கு
சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல் மெள்ள சீராக
மூச்சை உள்ளே இழுங்கள்.
முடியும்
வரை சிரமம் இல்லாத வரையில் மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத் தோன்றும்போது இரு மூக்கின்
வழியாகவும் மெள்ளச் சீராக மூச்சை,
தொடர்ச்சியாக வெளியே விடுங்கள்.
இப்படி காலையில் 10 முறையும், மாலையில் 10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை
இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்’ என்று ஜபிக்கலாம். கும்பகத்தின்போதும்
ஜபிக்கலாம்.
பலன்கள்: மனமும் உடலும்
பூரண ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் சுகமாக இதைப் பயிற்சிக்கலாம். மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.
இதயம் இதமாக இருக்கும்.
நடந்துகொண்டே
பயிற்சி
தோள் பட்டைகள் பின் செல்ல,
தலை
நிமிர்ந்து நடக்க வேண்டும். ஓர் அடிக்கு ஒன்று என, மூன்று அடிகள் எடுத்து,
மூன்று 'ஓம்’ அல்லது ஏதாவது ஒரு மந்திரம் சொன்னபடி மெள்ள மூச்சை இழுங்கள்.
பிறகு, 12 அடிகள் எடுத்து வைத்து 12 'ஓம்’களை ஜபித்து மூச்சை உள்ளே
நிறுத்தி வையுங்கள். பிறகு,
ஆறு அடிகள் எடுத்துவைத்து ஆறு 'ஓம்’களைச் சொல்லி மெள்ள மூச்சை வெளியே
விடவேண்டும். இது
ஒரு சுற்று.
இதன் பிறகு, சற்று ஓய்வாக நடக்கலாம். காலடி வைக்கும்போது 'ஓம்’ எனச் சொல்வது சிரமமாகத்
தெரிந்தால், காலடி எடுத்து வைத்தல் பற்றிக் கவலைப்பட
வேண்டாம். அதிக வேலைச் சுமையுள்ளவர்கள் வாக்கிங் போகும்போது காலையிலும் மாலையிலும்
இதைச் செய்யலாம். சுத்தமான காற்றில் நடந்தபடியே பிராணாயாமம் செய்வது, உடலுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும். அமர்ந்திருந்து செய்தே பழகியவர்கள், இப்படி நடந்தபடியே செய்யலாம்.
பலன்கள்: தாகமாக இருக்கும்போது
இந்தப் பயிற்சியைச்
செய்தால்
தாகம் தீரும். முக அழகு கூடும். உடல் வலிமை உண்டாகும். பசி, தாகம், தூக்கத்தை வெல்லலாம்.
விஷத்தைக்கூட முறியடிக்கும் வல்லமை பெற்ற இந்தப்பயிற்சி, உடல் வெப்பத்தையும்
குறைக்கும்.
நின்றுகொண்டே
பிராணப் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.
சீதளிப் பிராணாயாமம்
இதுவும் குளிர்ந்த
பிராணாயாமம்தான். சீதளம் எனில்,
குளிர்ச்சி
என்று பொருள். கோடையில் வெளியில் அதிகம் அடிக்கும்போது செய்தால் குளிர்ச்சியாக இருக்கும். உடலில்
இருந்து வெப்பம் காதுகள் வழியே வெளியேறுவதை உணரமுடியும்.
ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்துகொள்ளுங்கள்.
இரு உதடுகளின் இடையிலும்
நாக்கைத் துருத்தி குழல் போல் மடித்து வெளியே நீட்டவும். இருபுறமும் மடிந்த
நாக்கு நடுவில் குழல்போலப் பள்ளமாக இருக்கும். 'ஷ்’ என்று சீறும் ஓசையுடன் காற்றை
வாய் வழியாக உள்ளே
இழுத்திடுங்கள்.
பிறகு காற்றை விழுங்கிடுங்கள். சுகமாகப் படும்வரை மூச்சை உள்ளே அடக்கிக் கும்பகம்
செய்திடுங்கள். (வெப்பத்தை மட்டும் குறைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கும்பகம் செய்ய தேவையில்லை.)
பிறகு இரு மூக்குகளின்
வழியே மெள்ள சீராக வெளியே
விடுங்கள்.
இந்தப் பயிற்சி செய்வது எளிது. 10
முதல் 20 முறை பயிலலாம். நிற்கும்போது, நடக்கும்போது, எந்த நிலையிலும் எப்போதும்
செய்யலாம்.
பலன்கள்: இது உடலை குளிர்விக்கும். செரிமானத்தைச் சரி செய்யும்.
பித்தக் கோளாறுகள், கபத்
தொல்லை, தீராத
நோய்களின் வீக்கம், புண், காய்ச்சல், இருமலை
போக்கும். நா வறட்சி ஏற்படாது. தாகத்தைத் தீர்க்கும்.
நோய், களைப்பை
அகற்றலாம்!
மனிதனின் உயர்வைக்
கட்டுப்படுத்துவது களைப்புதான். அதன் அதீதம் அல்லது நீட்டிப்பே நோயை உண்டாக்குகிறது. வலி,
வீக்கம், உடல் உறுப்பு கெடுதலுடன் அதிகம் முடியாமை போன்றவை நோயினால் வருவதே.
களைப்பை நீக்கும் பிராணாயாமம் நோயையும் விலக்குகிறது. காரணம்,
எல்லாமே
மூச்சுதான்!
ஆழ்ந்து சுவாசிப்பதே
ஆரோக்கியம் நீட்டிக்க உதவிடும். இருந்தாலும், பிராணனை மையப் படுத்தும் நுணுக்கங்கள் சில.
பிராணனை வெளியிலிருந்து உள்ளே இழுங்கள். வயிற்றில்
அப்படியே நிரப்புங்கள்.
தொப்புளுக்கு நடுவிலும், மூக்கின் முனையிலும், இரு கால் பெருவிரல்களிலும் இந்தப் பிராணன் இருப்பதாக மனதில் ஆழ்ந்து
எண்ணவேண்டும். இது, அந்தந்த இடங்களில் பிராணனை மையப்படுத்தும்.
இதை,
சூரிய
உதயத்துக்கு முன்பும்,
சூரியன்
மறையும் மாலை வேளையிலும் செய்யலாம்.
இப்படிச் செய்யும்போது அனைத்து நோய்களில் இருந்தும்
விடுபடமுடியும். உடனடி பலனாகக் களைப்பு நீங்கும்.
தொப்புள் பகுதியில்
பிராணன் நிறுத்தப்படுவதால் எல்லா நோய்களும் விலகுகின்றன. காரணம்,
அங்கே
எல்லாப் பாகங்களுடனும் தொடர்புள்ள நாடிகள் வந்து சேரும் பகுதி உள்ளது. 'தம் கட்டுதல்’தான் இந்த மூச்சுப் பயிற்சி. எனவே, அது நீட்டிக்கும்போது களைப்பும்
காணாமல் போய்விடும்.
மூக்கின் முனையில்
மையப்படுத்துவதால் காற்றினுடைய தனித்தனிப் பொருள்கள் அத்தனையையும் ஆளும் திறன் உண்டாகும். அசுத்தம் நீங்கி, தூய பிராணன் நிலைபடும்.
கால் பெருவிரல்களில்
நிறுத்தப்படுவதால் உடல் லேசாகும். உடல் கனம் நீங்குவது என்பது அழுக்கு
நீங்குவதுதான்.
கும்பகம்:
குறிப்பிட்ட கால அளவில்
மூச்சை நிறுத்துவதே கும்பகம் எனப்படும். அதாவது,
மூச்சைச்
சலனமின்றி, சஞ்சாரம் இன்றி
ஓரிடத்தில் அடக்கிவிடுவது அல்லது
நிறுத்திவிடுவது. இதையே பிராணன் ஆயமம் = பிராணாயாமம் என்கிறார்கள். இதைச் சார்ந்த மற்ற
மூச்சு முறைகளும் அந்தப் பெயரிலேயே கூறப்படுகின்றன.
தம் கட்டுதல் என்கிறோமே
அதுதான் இது. இதுவே பலம்
ஆகிறது. பளு
தூக்கும்போதோ, பேசும்போதோ பிராணாயாமம்
நடக்கிறது. 'மூச்சைப் பிடித்துக்கொண்டு வேலை செய்கிறான்’ என்பார்கள். இது 'தம்’, 'ஸ்டாமினா’ எனப்படும் மூச்சை அடக்கும்
திறனையே குறிப்பதாகும்.
அந்தர்முக
கும்பகம் - மூச்சை உள்ளே
நிறுத்துவது.
பஹிர்முக
கும்பகம் - வெளியே மூச்சை
நிறுத்துவது.
கேவல(தனி) கும்பகம் -
உடனடியாக சுவாசம் தடைப்படுவது. அதாவது, மூச்சை உள்ளே இழுத்தல், வெளியே விடுதல் இல்லாமல்
ஒருவருக்குள்
மூச்சு
திடீரென நிற்பது. இதுவே கேவல கும்பகம்.
மந்திரங்கள்:
பிராணாயாமப் பயிற்சியில் மூச்சை அளக்கவே மந்திரம் கூறப்படுகிறது. 'ஓம்’ எனும்
பிரணவ மந்திரம், நாபிக்
கமலத்தில் இருந்து உச்சரிக்கப்படுவதால், சுவாசத்தை
சீராக இயக்கும். மந்திரத்தை ஜபித்தபடி செய்யும் பயிற்சியால்
மனமும் ஒருநிலைப்படும். கும்பகத்தோடு மந்திரம் நல்ல பலனைத்
தரும். காயத்ரி, ஓம், விருப்பமான
தெய்வ மந்திரம், பஞ்சபூத பீஜாட்சரங்கள்
சொல்லலாம். இவை, மூச்சின்
அளவை அறியவும் உதவி செய்யும். மூச்சை முடிந்தவரை
உள்ளிழுத்து, விடுவதும்
கும்பகம் செய்வதும் இயற்கையாக அமைந்துவிடும். மந்திர
நீளத்தில் சுவாசிப்பதும் கும்பகிப்பதும் அப்படியே.
கால அளவு:
மூச்சை வெளியிலோ, உள்ளேயோ நிறுத்தும் இடத்தையும் காலத்தையும் மாத்திரைகளின் மூலமாக
அளக்கப்படும். கண்ணிமைத்துக் கண் திறப்பது ஒரு மாத்திரை. கையை மூடிவிட்டு திறக்கும் அளவே ஒரு மாத்திரையின் கால அளவை நிர்ணயித்துள்ளனர்.
மூச்சு விட்டு மூச்சு இழுப்பது ஓர் அளவே. சிறுசிறு நிகழ்ச்சிகளால் இப்படிக் கால அளவு கணிக்கப்படும். 'ஓம்’ என்பது அ, உ, ம அடங்கிய ஓர் எழுத்து. இதைக் கொண்டும் மூச்சின்
காலம் அளக்கப்படும்.
இதுவே
ஆன்மிகமானது; நற்பயன் தருவது. எனவே, பலரும் இந்தக் கால அளவை 'ஓம்’ என்றே அளந்துகொள்வார்கள்.
தரை
விரிப்பு:
தரைவிரிப்போ, பருத்தித் துணி, பலகை அல்லது கம்பளி இன்றி வெறும் தரையில் உட்கார்ந்து
பிராணாயாமம் செய்யக் கூடாது. இதனால் உடலின் பிராணனை தரை இழுத்துக் கொண்டுவிடும். பூச்சிகளால் இடையூறு ஏற்படலாம். தரையின் சூடோ, குளிரோ உடலைத் தாக்கலாம்.
ஆசன அவசியம்
18 ஆசனங்களைப் பழகினால், பிராணாயாமப் பயிற்சியில் இடையூறு இருக்காது. அஜீரணமோ, மலச்சிக்கலோ, வாயுத் தொல்லையோ இருக்காது. இது, நாடிகளைத் தூய்மை செய்ய மிகவும்
உதவும். சூட்டையும் குளிரையும் தாங்கும் சக்தி நமக்குள் பெருகும். மேலும், உடலை நிமிர்த்தி உட்காரும் முறையும் ஒழுங்குப்படும்.
காலத்துக்கேற்ப
பயிற்சி!
வெயிலின்போது காலையில் மட்டும்
பயிற்சி செய்தால்
போதும்.
உடலில் உஷ்ணம் மிகுந்தால்,
உடலில்
வெண்ணெய் தடவியும், தலையில் நெல்லிக்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவி சிறிது
நேரம் கழித்து
குளிக்கலாம். சர்க்கரை அல்லது கற்கண்டை
தண்ணீரில் கரைத்துக்
குடிக்கலாம். நீர் மோராக கரைத்துக் குடிக்கலாம். துண்டை தண்ணீரில் நனைத்து உடலில்
போட்டுக்கொள்ளலாம். அடிக்கடி உடலில் தண்ணீர்
படும்படி செய்யலாம். இவை அனைத்தும் உடல்
உஷ்ணமாகாமல் தடுக்கும்.
குளிர்ச்சியைத் தரவல்ல
கேப்பைக் கூழில் மோர் கலந்து,
வெண்டைக்காய், வெந்தயம் சேர்த்து உண்ணலாம். இரவிலும் பகலிலும்
வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம்
சாப்பிடலாம்.
தக்காளி, முலாம், தர்ப்பூசணி போன்ற பழங்கள்
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
குளியல்
குளித்துவிட்டுதான்
பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பது இல்லை. குளித்தால் தலையில் ஈரம்
இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மெல்லிய துணியால் தலையை மூடிக்கொண்டு செய்யலாம். சிலருக்கு ஆசனம் போட குளித்தால்தான் உடல் வளையும். குளியல் குளிர்ந்த நீரிலா, வெந்நீரிலா என்று இடம், காலம் பார்த்து தேர்வு
செய்துகொள்ளலாம்.
செயலில்
ஆரோக்கியம்!
இடது கைக்கு ஏதாவது தலையணையை அண்டக் கொடுத்து படிப்பது, டி.வி.
பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். தூங்கும்போது எப்போதும் இடதுபுறம்
ஒருக்களித்துப் படுங்கள். எப்போதும் பகலில் வலதுபுறம் சாய்ந்து வலதுபுற
கைக்கு அடியில் ஏதாவது திண்டை வைத்துக்கொண்டு படிக்கலாம். அலுவலகம் எனில், வலதுபுறம்
சாய்ந்த நிலையில் வேலையைப் பாருங்கள். இடதுகாலின் மேல் வலதுகாலைப்
போட்டுக்கொள்ளுங்கள். இயற்கையாகவே இப்படி நடக்கலாம். ஆனால், பிறருக்கு
விநோதமாகப் படக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சுவாசம்
சுகமானது!
நன்றி-டாக்டர் விகடன்