உமா என்ற ஒலியுன் கூடிய சிவநாமங்கள்
Thursday, April 24, 2014
ஓம் என்னும் பிரணவம் “அகரம், உகரம், மகரம்’ என்ற மூன்றெழுத்துக்களால் ஆனது. இந்த அ, உ, ம என்ற எழுத்துக்களின் சேர்க்கையே “ஓம்’ என்பதாகும். இதில் “அ’ என்பது சிவனையும், “உ’ என்பது சக்தியையும், “ம’ என்பது அவர்களுடைய அருளையும் குறிக்கின்றது. இவற்றின் முறையை மாற்றி உ, ம, அ என்று ஒலிப்பதால், “உமா’ என்ற சொல் உருவாகிறது.
மந்திரங்களின் ஆதாரமாகவும், அதன் பொருளாகவும், அதன் பயனாகவும் இருப்பவள் தேவியே. எனவே இதனைச் “சக்தி பிரணவம்’ என்று அழைப்பர்.
அனைத்துமாய் விளங்கும் அம்பிகையின் தலைவனாக இருப்பதால் “உமாபதி’ என்று சிவபெருமானுக்குப் பெயர். சிவநாமங்களில் உமா என்ற ஒலியுடன் கூடிய சிவநாமங்களே உயர்ந்ததென்று கூறப்பட்டுள்ளது. உமா மகேஸ்வரன், உமேசன், உமா சகிதர் என்றெல்லாம் சிவனை அழைப்பர். “உமா மகேஸ்வர ஸ்வாமி’ என்பதே பேச்சு வழக்கில் “உம்மாச்சி’ என்றாயிற்று என்பார் காஞ்சி மஹாசுவாமிகள்
0 comments:
Post a Comment