பார்த்த,படித்த செய்திகள்

சாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ!

Monday, March 31, 2014

சாம்சங் நிறுவனம் சென்ற வாரம் தன் காலக்ஸி கிராண்ட் நியோ மொபைல் போனின் (GTI9060) விலையை இந்தியாவில் அறிவித்தது. இந்த போன் தற்போது இணைய வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,901.
5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன இதன் சிறப்புகளாகும். இதில், ஆட்டோ போகஸ் திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும். 0.3 எம்பி முன்புறக் கேமரா ஒன்றும் உள்ளது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ மற்றும் பாப் அப் பிளே வசதியும் கிடைக்கிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. இதன் ஸ்டோரேஜ் 8 ஜிபி / 16ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதில் 2100 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறதுகிடைக்கிறது

Read more...

நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் போன் நோக்கியா எக்ஸ்

நோக்கியா நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை நோக்கியா எக்ஸ் என்ற பெயரில், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து, பிப்ரவரியில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் அறிவிப்பு தரப்பட்டது. விண்டோஸ் 8 போல டைல்ஸ் அடிப்படையிலான ஹோம் ஸ்கிரீன் இதில் தரப்பட்டாலும், இது ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ராசசர் (S4 play MS M8225) இயங்குகிறது.
இதில் இரண்டு சிம் இயங்குவது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும். 3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. நோக்கியா ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தொகுப்புகளை டவுண்லோட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. Facebook, LINE Messenger, Picsart, Plants vs. Zombies 2, Real Football 2014, Skype, Spotify, Swiftkey, Twitter, Viber, Vine, WeChat, TrueCaller போன்ற பல அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டுக்கான புரோகிராம்கள் இங்கு கிடைக்கின்றன.
இதன் பரிமாணம் 115.5 x 63 x 10.44 மிமீ. எடை 128.6 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 512 எம்.பி. ராம் நினைவகம், 4 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி. கார்ட் விரிவாக்கம், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்., ஆகிய தொழில் நுட்பங்கள் எனப் பல வŒதிகள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1500 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு, வெள்ளை, சிகப்பு, இளஞ்சிகப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,599.
இதன் அறிமுக விழாவிலேயே, நோக்கியா நிறுவனம், தன் நோக்கியா எக்ஸ் ப்ளஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்.எல். ஆகிய இரு போன்களையும் வரும் இரண்டு மாத காலத்தில் இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்ப இருப்பதாக அறிவித்தது. இவை இரண்டும் இரண்டு சிம் இயக்கத்தினைக் கொண்டுள்ள ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களாகும். நோக்கியா எக்ஸ் ப்ளஸ், ஏறத்தாழ நோக்கியா எக்ஸ் மாடல் போனைப் போன்றதாகும். ஆனால், இதன் ராம் மெமரி 768 எம்.பி. உடையதாக உள்ளது. எக்ஸ் ப்ளஸ் திரை 4 அங்குல அகலத்திலும், எக்ஸ் எல் 5 அங்குல அகலத்திலும் திரைகளைக் கொண்டுள்ளது. இரண்டிலும் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்களைக் (MSM8225) கொண்டுள்ளன. நோக்கியா எக்ஸ் ப்ளஸ் மாடல் போனில் 3 எம்.பி. திறன் கேமராவும், எக்ஸ். எல். போனில் 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்.எல்.மாடலில் முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 3ஜி நெட்வொர்க் இணைப்பில் செயல் படுபவை என அறிவிக்கப்பட்டுள்ளது

Read more...

ஸ்வைப் ஹலோ ஆன்ட்ராய்ட் போன் ரூ. 6999

ஸ்வைப் டெலிகாம் (Swipe Telecom) நிறுவனம், அண்மையில், 6.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அகலத் திரையுடன் கூடிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை ரூ.6,999 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஜெல்லி பீன் ஆண்ட்ராய்ட் 4.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. 2 மெகா பிக்ஸெல் கேமரா பின்பக்கமாகத் தரப்பட்டுள்ளது. 0.3 மெகா பிக்ஸெல் கேமரா வெப் பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது
. இரண்டு சிம் இயக்கத்திலும், 3ஜி நெட்வொர்க் இணைப்பிலும் இது இயங்குகிறது. இதன் பரிமாணம் 183x101 x9 மிமீ. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 512 எம்.பி. ராம் நினைவகம், 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ்.வசதி, 2800 mAh திறன் கொண்ட பேட்டரி எனப் பல நவீன வசதிகளையும், இயக்கத்தினையும் இந்த போன் கொண்டுள்ளது

Read more...

நோக்கியா 220 டூயல் சிம் போன் ரூ. 2749

தொடக்க நிலை போன்களை பட்ஜெட் விலையில் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, அண்மையில், நோக்கியா 220 என்ற மாடல் போனை நோக்கியா வெளியிட்டுள்ளது. இது அண்மையில் நடந்த பார்சிலோனா உலக மொபைல் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
இதன் அம்சங்கள்: 2.4 அங்குல QVGA 262k எல்.சி.டி. திரை, இரண்டு சிம், இரண்டு அலைவரிசை இயக்கம், நோக்கியா ஆப்பரேட்டிங் சிஸ்டம், 2 எம்பி திறன் கொண்ட பின்புறக் கேமரா, ப்ளாஷ்லைட், மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, யு.எஸ்.பி. புளுடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய வசதி, தொடர்ந்து 15 மணி நேரம் பேசுவதற்கு மின் சக்தி வழங்கும் 1100 mAh திறன் கொண்ட பேட்டரி எனப் பல சிறப்புகள் இந்த போனில் கிடைக்கின்றன. இந்த மாடல் போனின் பரிமாணம் 99.5 x 58.6 x 13.2 மிமீ. இதன் எடை 89.3 கிராம். சிகப்பு, கருப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் இது கிடைக்கிறது.
இதன் கூடுதல் சிறப்பாக இதில் தரப்படும் நோக்கியா எக்ஸ்பிரஸ் ப்ரவுசரைக் கூறலாம். அத்துடன் இணைந்த மைக்ரோசாப்ட் பிங் தேடு தள வசதியும் கிடைக்கிறது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யாஹூ மெசஞ்சர் ஆகிய புரோகிராம்கள் இணைந்து தரப்படுகின்றன

Read more...

மெமரி ஸ்கேல்

பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு இவற்றை உணர்கிறோம். அதற்கும் மேலாகவும் அலகுச் சொற்கள் வந்துள்ளன. எனவே அவற்றை இங்கு காணலாம்.
ஒரு கிலோ பைட் (kilobyte)= 1,024 பைட்ஸ்
ஒரு மெகா பைட் (megabyte)=1,024 கிலோ பைட்ஸ்
ஒரு கிகா பைட் (gigabyte)=1,024 மெகா பைட்ஸ்
ஒரு டெரா பைட் (terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்
ஒரு பெட்டா பைட் (petta byte) = 1,024 டெரா பைட்ஸ்
ஒரு எக்ஸா பைட் (exa byte)=1,024 பெட்டா பைட்ஸ்
ஒரு ஸெட்டா பைட் (zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்
ஒரு யோட்டா பைட் (yotta byte) = 1,024 ஸெட்டா பைட்ஸ்
கம்ப்யூட்டர் கணக்கில் ஒரு கிலோ என்பது 2 டு த பவர் ஆப் 10 (2^10) அதனால் தான் 1,024 எனக் கிடைக்கிறது. ஒரு சிலர் இதனை 10 டு த பவர் ஆப் 3 (10^3) என எடுத்துக் கொள்கிறார்கள். ட்ரைவ்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட இது போல சமயங்களில் எடுத்துக் கொள்வதால் தான், நமக்கு 1,024 க்குப் பதிலாக 1,000 கிடைக்கிறது

Read more...

மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்

பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்படுத்துவதில் அதன் முழுமையான பயனையும் பெறுவதில்லை. குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்களையும் வசதிகளையும் காணலாம்.
1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட, மவுஸ் + ஷிப்ட் கீகளைப் பயன்படுத்த இடம் தருகின்றன. தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும். எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும்.
இந்த வகையில் ஆல்ட் கீ வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம். டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும்.
2. டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம். இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது. இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம். பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.
3. இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.
4. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம். சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம்.
5. இரண்டு மற்றும் மூன்று முறை கிளிக்: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்.
6. டெக்ஸ்ட் ஹைலைட் அல்லது எந்த ஒரு ஆப்ஜெக்ட்டின் ப்ராப்பர்ட்டீஸ் அறிய, அதன் மீது எப்போதும் ஒரு ரைட் கிளிக் செய்தால் போதும். ஒரு சொல்லின் மீது ரைட் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து, காப்பி செய்து கொண்டால், அந்த சொல்லை எப்போதும், எந்த இடத்திலும் ரைட் கிளிக் செய்து பேஸ்ட் செய்திடலாம்.
இதே போல, மவுஸின் ரைட் கிளிக் மூலம், ஒரு பைல் அல்லது டெக்ஸ்ட் ஒன்றை கிளிக் செய்து இழுத்துச் சென்று, ஓரிடத்தில் விட்டுவிடுகையில், அந்த பைலை அதன் இடத்திலிருந்து நகர்த்த வேண்டுமா அல்லது காப்பி செய்திட வேண்டுமா என்ற ஆப்ஷன் உங்களுக்குத் தரப்படும். இது நம் நேரத்தை வீணடிக்காத செயல்பாட்டினைத் தருகிறது. பைலை கிளிக் செய்து, காப்பி செய்து, பின்னர் இன்னொரு இடத்தில் சென்று வைத்திட சற்று நேரம் பிடிக்கும். இது மவுஸின் இந்த தனிச் செயல்பாட்டினால் எளிதாகிறது.
பிரவுசர் ஒன்றில் ஏதேனும் லிங்க் ஒன்றில் கிளிக் செய்திடுகையில், கண்ட்ரோல் பட்டனை அழுத்தியவாறு கிளிக் செய்தால், அங்கு அந்த லிங்க் தொடர்பாக ஆப்ஷன்கள் அடங்கிய மெனு ஒன்று தரப்படும்.
7. கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸ் கிளிக் செய்தால் வரிசையாக அமையாத பைல்கள் அல்லது டெக்ஸ்ட் பகுதிகளை ஹைலைட் செய்திடலாம்.
8. மொஸில்லா பயர்பாக்ஸ் பயனாளர்கள், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, டேபிள் ஒன்றில் உள்ள, தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு செல்லினையும் தனித்தனியே கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
9. தற்போது வருகின்ற மவுஸின் வடிவமைப்பில், பக்கவாட்டிலும் பட்டன்கள் தரப்படுகின்றன. இந்த பட்டன்களைக் கொண்டு பல செயல்பாடுகளை செட் செய்திடலாம். மாறா நிலையில், இடது பக்கம் உள்ள பட்டன், இணையப் பக்கம் ஒன்றில், பின்னோக்கிச் செல்ல பயன்படும். இது நமக்கு வசதியாகவும், எளிமையாகவும் இருக்கும். பக்கத்தில் பின்னோக்கிச் செல்ல, மவுஸைத் தனியே நகர்த்தி, வலதுபுறம் உள்ள பாரில் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்து செல்லத் தேவையில்லை.
10. ஸ்நாப் டு பட்டனைப் பயன்படுத்தும் முறை ஒன்று தற்போது உள்ள மவுஸ் இயக்கத்தில் காணப்படுகிறது. டயலாக் பாக்ஸ் ஒன்றின் மூலம் ஒரு செயல்பாட்டினை மேற்கொள்கையில், அது உறுதியானதுதானா என நம்மிடம் கேள்வி கேட்கப்பட்டு, பின் நாம்,மவுஸின் கர்சரை ஓகே பட்டனுக்குக் கொண்டு செல்ல வேண்டும். எடுத்துக் காட்டாக, பைல் ஒன்றை அழிக்க கட்டளை கொடுத்தாலோ, விண்டோ ஒன்றை மூடுவதற்கு முயற்சி எடுத்தாலோ, உடனே ஒரு சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, இந்த செயல்பாட்டில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? என்ற வினா தரப்பட்டு, உங்களிடமிருந்து விடை எதிர்பார்க்கப்படும்.
இப்போது Snap To என்ற வசதி இயக்கப்பட்டிருந்தால், மவுஸின் கர்சர் தானாகவே, Ok பட்டனுக்குச் சென்று தயாராக இருக்கும். செயல்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், நீங்கள் மவுஸால் ஒரு கிளிக் செய்தால் போதும். இதனை எப்படி இயக்கி வைப்பது? என்று எண்ணுகிறீர்களா?
கண்ட்ரோல் பேனல் செல்லுங்கள். அங்கு Mouse properties என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Pointer Options என்ற டேப்பின் கீழ் கிடைக்கும் Snap To என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், மவுஸ் செட்டிங்ஸ் பிரிவில், மற்ற வசதிகளையும் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, மவுஸின் செயல் வேகத்தினை அதிகரிக்கலாம். இதன் மூலம், நம் வேலைத் திறனில் வேகம் ஏற்படும்.
எந்த விண்டோவிலும், அதன் மேலாக உள்ள டைட்டில் பாரில் டபுள் கிளிக் செய்தால், விண்டோ அதிக பட்ச அளவில் விரித்துக் காட்டப்படும். ஏற்கனவே விரிக்கப்பட்டிருந்தால், அது சுருக்கிக் காட்டப்படும். எந்த விண்டோவிலும் அதில் இயங்கும் புரோகிராமிற்கான ஐகான் காட்டப்படும். இதில் டபுள் கிளிக் செய்தால், அந்த விண்டோ மூடப்படும். புதிய வடிவமைப்பில் வரும் பல மவுஸ்களில், இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. அவை எவை எனத் தெரிந்து கொண்டு முழுப் பயனையும் பெறலாம்

Read more...

தெரிஞ்சுக்கலாமா

பைட் ('byte') என்னும் சொல் 'by eight' என்பதன் சுருக்கமாகும். 'pixel' என்பது 'picture cell' or 'picture element என்பதன் சுருக்கமாகும்.
வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன

Read more...

முன்னேற்றம் தரும் மூன்று

பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சியிலும் கூட உள்ளத்தில் அளப்பரிய சக்தி உண்டாகி விடும்.
* தற்பெருமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். போட்டி, பொறாமை எண்ணம் சிறிதும் இருப்பது கூடாது.
* ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வதே வலிமை. உலகிற்கு நன்மை செய்வதே நமது நோக்கம்.
* அமைதி, ஆர்வம், ஒழுக்கம் இந்த மூன்று அம்சங்களும் பணியில் இருப்பது அவசியம்.
* நம்பிக்கை, நேர்மை, பக்தி இந்த மூன்றும் இருந்து விட்டால் முன்னேற்றம் வந்து கொண்டேயிருக்கும்.
விவேகானந்தர்

Read more...

குஷ்பு இட்லி

Sunday, March 30, 2014

என்னென்ன தேவை?

பச்சரிசி - 4 கப்,
ஜவ்வரிசி - 1 கப்,
ஆமணக்கு விதை - சிறிதளவு,
உளுத்தம் பருப்பு - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
சமையல் சோடா - சிறிது.
எப்படிச் செய்வது?

பச்சரிசியையும் ஜவ்வரிசியையும் தனித்தனியே ஊற வைத்து தனித்தனியே அரைத்துச் சேர்க்கவும். குடையக் குடைய அரைத்த உளுத்தம்  பருப்பையும், ஆமணக்கு விதையை யும் சேர்க்க வும். இவை அனைத்தையும் சேர் த்து உப்பு போட்டு கலக்கவும். இட்லி வார்ப்பதற்கு முன் சமையல்  சோடா சிறிதளவு கலந்து அடித்துவிட்டுப் பிறகு வார்க்கவும்

Read more...

தேங்காய் போளி

Thursday, March 27, 2014

என்னென்ன தேவை?

முற்றிய தேங்காய்-1துருவியது
மைதா மாவு-500 கிராம்
வெல்லம்-100 கிராம்
ஏலக்காய்பொடி-சிறிதளவு
முந்திரி- 50 கிராம்
அரிசி மாவு-சிறிதளவு
நெய் (அ) எண்ணெய்-தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

துருவிய தேங்காயுடன் அதற்கேற்றார் போல வெல்லம் போட்டு வாணெலியை சூடு செய்து கிளறவும். தேங்காயில் இருக்கும் தண்ணீர் பதமே போதுமானது. வெல்லம் உருகி இரண்டும் ஒன்று சேர்த்து கெட்டியாக வந்துவிடும். நன்றாக கிளறி ஏலக்காய்ப்பொடி, முந்திரி (நெய்யில் வறுத்து) இவற்றை போட்டு ஆறியதும் உருட்டி வைத்துக்கொள்ளவும். (பூரணக் கலவைக்க சிறிது அரிசி மாவு தூவிக்கொள்ளவும்) கெட்டியாக இருக்க வேண்டும். மைதாவை உப்பு, தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து  சிறிதளவு எடுத்து வட்டமாக செய்து அதன் உள்ளே பூரணத்தை வைத்து மூடி எண்ணெய் தொட்டு மெல்லியதாகத் தட்ட வேண்டும். பிறகு தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டு வார்த்து எடுக்கவும். இது மிகவும் நன்றாக இருக்கும்

Read more...

கடவுள் மட்டுமே சத்தியம்

Wednesday, March 26, 2014

* கடவுளுக்குச் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்தால் அந்தப் பணத்தை ஏழைகளின் வயிற்றுப் பெட்டியில் நிரப்புங்கள்.
* இறைவன் வெறும் கற்பனைப் பொருள் அல்ல. அருள் தாகத்துடன் ஒவ்வொருவரும் அவரவருக்குள் அடைய வேண்டிய சத்தியப்பொருள்.
* பிறர் குற்றங்களைப் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்வில் எவ்விதக் குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* ஏழைகளின் பசியைப் போக்கி இறையருளைப் பெற்று இன்புறுங்கள். அதுவே பிறவிப்பயன்
* கடவுளைச் சரணடைந்து வழிபடாவிட்டால், பொய், பொறாமை போன்ற தீய பண்புகளை நம்மால் அகற்ற முடியாது.
* கொடுமையான நோன்பு நோற்பதைக் காட்டிலும் உயிர்களை அன்புடன் நேசித்து கொல்லாவிரதம் மேற்கொள்வது சிறந்தது.
* வெள்ளம் வருமுன்னே அணை போட்டுத் தடுப்பது போல, தீய சிந்தை மனதில் எழுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவது மேலானது.
வள்ளலார்

Read more...

உத்தமரோடு உறவு கொள்!

* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு.
* உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.
* நல்ல எண்ணத்தோடு இருங்கள். அதுவே நடத்தையைப் பாதுகாக்கும்.
* பசித்தோர் முகம் கண்டு இரக்கம் கொள்ளுங்கள். உயிர்களிடம் கருணையுடன் இருங்கள்.
* மனம் ஒன்றி கடவுளின் திருவடியை நினைக்கும் உத்தமரின் உறவு நன்மையளிக்கும்.
* பொய், பொறாமை, கபடம் போன்ற தீய குணங்களை கடவுள் வழிபாட்டால் மட்டுமே அகற்ற முடியும்.
 வள்ளலார்

Read more...

நல்லதை உடனே செய்க!

கடவுளை வழிபட வாத்தியம் எதுவும் தேவையில்லை. நெகிழ்ச்சியோடு உள்ளம் உருகி அழும் கண்ணீரே மேலான வழிபாடு.
* கடவுள் ஒரு கற்பனைப் பொருள் அல்ல. ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் அடைய வேண்டிய சத்தியப்பொருள்.
* மனிதப் பிறவி நமக்கு வாய்த்திருக்கிறது. அதைக் கொண்டு நல்ல செயல்களை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டியது நம் கடமை.
* கடவுளுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை ஏழைகளுக்காக செலவழியுங்கள்.
* கடவுளை சரணடைந்தால் ஒழிய பொய், பொறாமை போன்ற தீய பண்புகள் நம்மை விட்டு நீங்காது.
* ஜீவகாருண்யத்துடன் எல்லா உயிர்களையும் நேசித்து வாழ்வதே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
* பகட்டாக உடை உடுத்துவதும், ஆடம்பரமாக நடப்பதும் ஆன்மிக வாழ்விற்குப் புறம்பான செயல்கள்.
வள்ளலார்

Read more...

பதட்டம் கூடவே கூடாது

சூரிய உதயத்துக்கு முன்னால் விழிப்பது சிறந்த பழக்கம். அதிகாலையில் கடவுளைத் தியானம் செய்தல் அவசியம். பின்னர் காலைக்கடன்களை முழுமையாக செய்தல் வேண்டும். இளம் வெயிலில் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* இளம்வெந்நீரில் அழுக்கு தீர தேய்த்துச் சுத்தமாக குளித்தல் வேண்டும். காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணிதல் வேண்டும்.
* குளித்தபின் கடவுளை சிறிதுநேரம் வணங்க வேண்டும். பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். வேகவேகமாகவோ அல்லது சோம்பேறித்தனத்துடன் மிக நிதானமாகவோ சாப்பிடக்கூடாது. சாப்பிட்டு முடிந்தவுடன் வெந்நீர் அருந்த வேண்டும்.
* கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவற்றை கனவிலும் நினைக்கக் கூடாது. புகை, கள் போன்ற தீய பழக்கங்களையும் அறவே தவிர்க்கவேண்டும். பதட்டத்தோடு எச்செயலையும்
அணுகுதல் கூடாது. இவற்றை விலக்காவிட்டால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியாது.
* நல்லோர் மனதை நடுங்க செய்யும் காரியத்தை கைவிடுங்கள். நம்பியவர்களை நட்டாற்றில் கை கழுவி விடாதீர்கள். ஆசை காட்டி, யாரையும் மோசம் செய்யாதீர்கள். யாரையும் அவமதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள்.
 வள்ளலார் 

Read more...

எண்ணம் செயலாகட்டும்

* வெளியே வெளிச்சம். உள்ளே இருட்டு என்று மனிதன் வாழ்வது கூடாது. உள்ளும் புறமும் தூய்மையுடன் இருக்க வேண்டும்.
* கருணை உள்ளத்தில் ஊற்றாய் பெருகட்டும். உடம்பெங்கும் வழிந்தோடட்டும்.
* எங்கு அன்பு நெஞ்சம் இருக்கிறதோ, அங்கு தான் கடவுளும் இருக்கிறார் என்பதை உணருங்கள்.
* பக்தியால் கண்ணீர் பெருக்குங்கள். அந்த கண்ணீரால் உடம்பு மட்டுமின்றி உள்ளமும் நனையட்டும்.
* உள்ளத்தில் நல்லதை ஆழமாக எண்ணுங்கள். எண்ணியதை நிறைவேற்ற உடனே செயல்படுங்கள்.
 வள்ளலார்

Read more...

பிறரை மதிக்கப் பழகுங்கள்

உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.
* தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய்
இருக்கிறார்.
* கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.
* தன்னைப் போல பிறரையும் மதிப்பது மனித நேய ஒருமைப்பாடு. தொண்டு மனப்பான்மையுடன் அடுத்தவருக்கு உதவி செய்வதை கடமையாக கொள்ள வேண்டும்.
* எங்கும், எதிலும், எப்போதும் இருப்பவர் கடவுள். அவரை ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வழிபட்டால் அவர் திருவருள் கிடைக்கும்.
* அன்பையும், இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்

Read more...

கோதுமை அல்வா

என்னென்ன தேவை?
I
கோதுமை - 1 கப்
பால் - 2 கப்
ஏலக்காய்த்தூள் - 2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
சர்க்கரை - 6 கப்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நெய் - 2 கப்

எப்படி செய்வது?

கோதுமையை முதல்நாளே ஊறவைக்கவும். மறுநாள் கிரைண்டரில் போட்டு அரைத்த தூய்மையான வெள்ளைத்துணி அல்லது வடிகட்டியில் போட்டு  பிழிந்து பால் எடுத்து கொள்ளவும். ஒரு அடிகனமான வாணிலியில் 6 கப் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் வரை நீர் ஊற்றி ஒற்றை கம்பி  பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். ஆட்டிஎடுத்த கோதுமைப் பாலையும், சாதாரண பாலையும் பாகுடன் சேர்த்துக் கிளறவும். நன்றாக கெட்டியாகக்  கிளறி அகலமான தட்டில் கொட்டி முந்திரி தூவி அலங்கரிக்கவும். சுவையான கோதுமை அல்வா ரெடி.

Read more...

வாயு தொல்லையால் அவஸ்தைப்படுறீங்களா

Tuesday, March 25, 2014

வாயு பிரச்சனையை தவிர்க்க கட்டுப்பாடான உணவு பழக்கம், மெதுவாக உணவுகளை மென்று உண்ணுதல், சிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுதல் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற எளிய, முக்கிய பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

விரைவான நிவாரணத்திற்கு, மசாலா பொருட்கள், காபி, திடமான தேநீர், இறைச்சி, கேக், ஆல்கஹால் மற்றும் மருத்துவர் குறிப்பிட்டு கூறும் புளிப்பான உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒரு கப் தண்ணீரில், எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதனுடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும்.

பேக்கிங் சோடா தண்ணீரில் நன்றாக கரையும் வரை அதை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். இதனை பருகினால், இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். முடிந்த வரை இதனை காலையில் செய்து, உடனடி நிவாரணியை பெறுங்கள்.

மூலிகை தேநீர், செரிமான அமைப்பை துரிதப்படுத்தி மேம்படுத்தவும் செய்யும். அதிலும் சீமைச்சாமந்தி, ராஸ்பெர்ரி, நாவல் பழம் மற்றும் புதினாவால் செய்யப்பட்ட தேநீர் குடிப்பது மிகவும் நல்லது.

தினமும் காலையில் எழுந்ததும் 1-2 பல் பூண்டை நெருப்பில் சுட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பின் ஒரு டம்ளர் சுடு தண்ணீரைப் பருகினால், வாயுத் தொல்லை நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தினமும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூளை வாயில் போட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை வரவே வராது

Read more...

தூக்கத்தில் உளறுவது ஏன்?

இரவில் தூங்கும் போது சிலர் தன்னை அறியாமல் பேசுவதை கேட்டிருப்பீர்கள். இதனை தூக்கத்தில் உளறுதல் என்பர். இவை ஏன் ஏற்படுகிறது என்று தெரியுமா? தூக்கத்திற்கான கட்டுப்பாட்டு மையம் மூளையின் முகுளப் பகுதி தான்.

இருப்பினும் தாலமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு மூளை தண்டுப்பகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் தூக்கத்தின் தன்மை சில சமயங்களில் மாறுபடுகிறது.

பொதுவாக ஆழ்ந்து தூங்கும் நிலை குழந்தைப் பருவங்களில் அதிக அளவுகளில் ஏற்படுகிறது. இந்த ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில், உணர்வு நரம்புகளின் தூண்டுதலால் தானாகப் பேசுவதும், புலம்புவதும் ஏற்படுகிறது

Read more...

கேரட் அல்வா

என்னென்ன தேவை?

துருவிய கேரட் - 4 கப்,
பால் - ஒரு கப், சர்க்கரை/பனங்கற்கண்டு/வெல்லம் - அரை கப்,
தூளாக்கப்பட்ட முந்திரி/பாதாம்/பிஸ்தா - அரை கப்,
வெண்ணெய் (அ) நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
.
எப்படிச் செய்வது?

கேரட்டை கழுவி சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது நெய் விட்டு சூடேற்றவும். இதில் கேரட்துருவலை இட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு பால் சேர்த்து மிதமான தீயில் கேரட்டை வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் சர்க்கரை அல்லது  பனங்கற்கண்டு அல்லது வெல்லம் சேர்க்கவும். இது மீண்டும் தண்ணீராக நீர்த்துவிடும். இதை 5 முதல் 10 நிமிடம் வரை மிதமான தீயில் கிளறவும்.  தண்ணீர் முழுவதும் வற்றியபின் ஏலக்காய் தூள், முந்திரி அல்லது பாதாம் அல்லது பிஸ்தா ஏதாவதொரு பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து  இறக்கவும். இதனை ஐஸ்கிரீமுடன் சேர்த்து அல்லது ப்ளெயினாக பரிமாறலாம்

Read more...

அன்னபூர்ணா சாம்பார்

Monday, March 24, 2014

என்னென்ன தேவை?

கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்த துவரம்பருப்பு - இரண்டு கப்
முருங்கைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2 (ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டியது)
சின்ன வெங்காயம் - கால் கப்
தக்காளி - பொடியாக நறுக்கியது கால் கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
புளி - ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு
அன்னபூர்ணா சாம்பார் பவுடர் அல்லது
சாதாரண சாம்பார் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - சிறிது
உப்பு - தேவையான அளவு.

அரைக்க...


சின்ன வெங்காயம் - அரை கப்
தக்காளி - ஒன்று
தேங்காய் - கால் கப்
பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க...
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - ஒரு சிட்டிகை
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
.

எப்படி செய்வது?

புளியை நீர்க்க கரைத்து வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்துக் கிளறவும். சிறிது தண்ணீரும் தக்காளியும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். அரைத்த விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்ததும் புளித்தண்ணீரும் பருப்பும் வெல்லமும்  பெருங்காயமும் சேர்க்கவும். மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம்,  மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் தாளித்து சாம்பாரில் கலக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சூடாக இட்லி, தோசை அல்லது வடையுடன்  பரிமாறவும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை?

அன்னபூர்ணா சாம்பாரில் முக்கியமானது அவர்களின் சாம்பார் பொடி. வறுத்து அரைக்கும் சாம்பார் பொடி சுவையை மாற்றிவிடும். அதனால்  சாதாரணமான சாம்பார் பொடியே போதுமானது. அதிக நேரம் கொதிக்க விட்டால் முருங்கைக்காய் கரைந்துவிடும். பருப்பு அதிகம் வெந்து குழையாமல் முழுதாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் துவரம்பருப்புடன் சிறிது மைசூர் பருப்பு சேர்க்கலாம்

Read more...

what is the difference between GPRS, EDGE, 3G and 4G?

Saturday, March 22, 2014

what is the difference between GPRS, EDGE,
3G and 4G?
GPRS- refers to a service on the 2G network that provides basic data up to
56kbps (similar to dial-up speeds)
 EDGE-It is a 2.5G technology. An enhancement of the 2G technology which  provides higher data transfer rates compared  to GPRS (the default on 2G).The speeds can go up to 144 Kbps
3G-3G technology provides faster / higher  data transfer rates compared to the 2G network (EDGE & GPRS).This technology  theoretically can offer speeds between 1-21/Mbps.
4G- This technology rides on LTE platform  and is the latest in the world of mobile data transfer. It is the next generation of mobile  communications. Currently it is the most  advanced technology available. Theoretical
data downlink speeds range between 2-100 /Mbps.

How is 4G better than 3G?
Being the latest platform of mobile  communications 4G - LTE can enable real mobile (wireless) broadband experience. 4G  provides upto 5 times faster speeds than 3G  making it suitable for all type of high speed
applications and services. 4G is also touted  to be the fastest wireless internet service
source-Airtel

Read more...

what is 4G or LTE?

what is 4G or LTE?
LTE stands for "Long Term Evolution" – it is a  radio access technology to deliver Very high speeds. 4G is a Standard in Mobile Network  Technology and stands for "Fourth Generation"-the latest after 2G and 3G which gives you a faster and rich internet  experience. With 4G LTE hi-speeds, you can notice a visible difference while downloading  files, doing video-chat, playing multiplayer  games or while viewing HD videos  online.
source-Airtel

Read more...

இளமையில் உழை

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். அதுபோல, இளமைக் காலமே உழைப்பதற்கு ஏற்ற காலம்.
* துன்பம் கற்சுவர் போல, நம்மைச் சூழ்ந்து நின்றாலும் அதைப் பிளந்து விட்டு முன்னேறும் சக்தி ஒழுக்கத்திற்கு உண்டு.
* செல்வ நிலையில் பணிவும், வறுமையுற்ற காலத்தில் துணிவும் மனிதனுக்கு அவசியம்.
* நரகமே கிடைத்தாலும் பரவாயில்லை சத்தியத்தை கைவிடத் துணிந்து விடாதீர்கள்.
* கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பன் திருடனுக்குச் சமமானவன்.
 விவேகானந்தர்

Read more...

தியாக உள்ளம் வேண்டும்

பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் மாற்றுவதே ஆன்மிகத்தின் பணி.
* மிருகம், மனிதன், தெய்வம் ஆகிய மூன்று குணங்களும் சேர்ந்த கலவையாக மனிதன் இருக்கிறான்.
* மரணம் வருவது உறுதியாக இருக்கும் போது, நல்ல ஒரு செயலுக்காக நம் உயிரை விடுவது மேலானது.
* வெற்றி தோல்வியைப் பற்றிய சிந்தனை வேண்டாம். தியாக உள்ளத்துடன் சேவை செய்வதில் இறங்குங்கள்.
* எண்ணத்தைப் பொறுத்தே உலகத்தை அளக்கிறோம். அழகும், அவலட்சணமும் மனதில் தோன்றும் எண்ணத்தின் வெளிப்பாடே.
விவேகானந்தர்

Read more...

பக்தி தரும் சக்தி

* உலக வாழ்விலுள்ள பிரச்னைகளில் இருந்து தப்பி ஓட நினைப்பவனே கோழை.
* வெற்றி தோல்வி பற்றிய சிந்தனை தேவையில்லை. தியாக உள்ளத்துடன் பணியில் ஈடுபடுங்கள்.
* உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை உடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் வந்திருக்கிறோம்.
* உண்மையான சமத்துவம் என்பது எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.
* பணத்தால் மட்டும் சக்தி கிடைப்பதில்லை. நன்மையும், தெய்வபக்தியுமே சக்திக்கான கருவூலங்கள்.
 விவேகானந்தர்

Read more...

நம்பிக்கை மலரட்டும்

நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனை, மனிதகுலம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
* தேவையற்ற விஷயத்தில் மனம் ஈடுபட்டால், ஆக்கசக்தி விரயமாகி விடும்.
* அளவற்ற மனபலம், இரக்கமுள்ள இதயம் கொண்ட மனிதனே மகாத்மா. அவனால், உலகமே நன்மை அடைகிறது.
* எப்போதும் தன்னம்பிக்கை கொண்டிருங்கள். அது தெய்வீக சக்தியை நம்மிடம் வரவழைத்து விடும்.
* வாழ்வில் துன்பம் ஏற்படுவதற்கு நம்மிடமுள்ள அறியாமையைத் தவிர வேறு காரணம் இல்லை.
விவேகானந்தர்

Read more...

அன்பே ஆணிவேர்

அறிவோடு ஒன்றி விடும் போது தான் நம்முடைய குறைகளை அகற்ற முடியும்.
* தாய், தந்தையரை மகிழ்வித்தால் கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.
* அன்பின் அடிப்படையில் செய்யப்படும் அனைத்தும் ஆனந்தம் தரும். அன்பே ஆணிவேர் என்பதை உணருங்கள்.
* நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் கிடையாது.
* கோபத்தில் சிறப்பான பணிகளைச் செய்ய இயலாது. அமைதியில் பணி ஆர்வம் அதிகரிக்கும்.
 விவேகானந்தர்

Read more...

தைரியமாக இரு

அறியாமையால் அச்சம் உண்டாகிறது. அச்சம் துன்பத்திற்கு வழிவகுக்கிறது.
* நிமிர்ந்த நெஞ்சுடன் தைரியமாகப் போராடுங்கள்.
* பணியின் முழுப் பொறுப்பையும் உங்கள் மீது சுமத்திக் கொள்ளுங்கள்.
* துணிவுடன் செயலாற்றுங்கள். உங்களுக்குரிய விதியை வகுத்துக் கொள்வது நீங்கள் தான் என்பதை உணருங்கள்.
* ஒழுக்கம், அன்பு, அமைதி உள்ளவர்களை@ய இந்த மண்ணுலகம் வேண்டுகிறது.
 விவேகானந்தர்

Read more...

பில்லி, சூனியம் விரட்டும் மந்திரம்

முதலில் காணவிருப்பது ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் மூல மந்திரமாகும். இதை ஒருவர் குரு முகமாகப் பெற்று உச்சாடனம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். அப்படியில்லாவிடில் ஒரு ஸ்வாதி நட்சத்திர தினத்தன்றோ, அல்லது ஒரு பிரதோஷ தினத்தன்றோ,

அல்லது கார்த்திகை மாதம் வரக்கூடிய ஏதாவதொரு ஞாயிற்றுக் கிழமையன்றோ ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றிவைத்து 12 முறை பிரதட்சணம் வந்து நன்கு பிரார்த்தனை செய்து கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்ய தொடங்க வேண்டும்.

அன்றிலிருந்து தொடர்ந்து 108 நாட்கள் தினமும் 48 முறை வீட்டிலோ, லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னிதியிலோ உச்சாடணம் செய்து வந்தால் எந்தவிதத் துன்ப துயரமும் அணுகவே அணுகாது.

‘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

இதை அவசரமில்லாமல் நிதானமாகச் சொல்ல வேண்டும். எண்ணிக்கைக்கு துளசி மாலையைப் பயன்படுத்தலாம். அசைவ உணவுப் பழக்கம் இருந்தால் அதை நிச்சயமாகத் தவிர்த்தே ஆக வேண்டும். இந்த மந்திரத்தை, சாத்வீக வேளையான சூரிய உதயத்திற்கு முன்பாகச் சொல்லி வருதல் விசேஷமாகும்.

மேலும் சிரமங்கள் கடுமையாக இருந்தால் வீட்டில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் படத்தை வைத்து அதற்கு பானகம் நைவேத்தியம் செய்து, தூப, தீப ஆராதனை செய்து 24 முறை பிரதட்சண நமஸ்காரம் செய்து வந்தால் மிக நல்ல பலன்களை நடைமுறையில் பார்க்கலாம்

Read more...

துன்பங்களில் இருந்து காக்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்

சிலரது வாழ்வில் பலவிதமான எதிர்பாராத துன்பதுயரங்கள் வாட்டி வதைக்கும். அது போன்ற சமயங்களில் நம்முடைய வாழ்வை காப்பாற்ற ஒரு மஹா சக்தியின் அனுக்கிரகமே நம்முடைய முக்கிய தேவையாகும். அது போன்ற சமயங்களில் சமயங்களில் நம்மை காப்பாற்ற கூடிய சக்திகளில் நரசிம்மரின் சக்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச

முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

வராத நல் வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும்

Read more...

எப்போதும் புன்னகை

உலகிற்கு நன்மை செய்வதே நோக்கமாக இருக்கட்டும். நம் பெயர்களை பறை சாற்றுவது அல்ல.
* உறங்கிக் கொண்டிருக்க இது காலம் அல்ல. ஒற்றுமை உணர்வோடு பாடுபட்டு சமுதாயத்தை முன்னேற்றுவோம்.
* அடக்கப்படாத மனம் கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ என்றென்றும் பாதுகாப்பு அளிக்கும்.
* பேச்சில் இனிமையும், இதழில் புன்னகையும் எப்போதும் இருந்தால், கடவுளின் அருகில் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.
* அற்பமான எதையும் நாட வேண்டாம். அதை கால்விரலால் கூட தீண்டுவது கூடாது.
விவேகானந்தர்

Read more...

இறைவனுடன் நெருங்கியிருப்பவர்

உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக தண்டிக்கவும் மாட்டார்.
* எல்லாவற்றையும் கடவுள் செய்வார் என்று எதிர்பார்க்கும் குணம் கூடாது. நம் கடமையை நாமே செய்வது குறித்தும், எந்தச்சூழலில் வாழ்கிறோம் என்பது குறித்தும் அறியும் அறிவை இறைவன் நமக்கு தந்துள்ளதை மறக்கக்கூடாது.
* அமைதியாக இருப்பவர் இறைவனுக்கு நெருக்கமானவர். வீண் விவாதம், தேவையற்ற வாக்குவாதங்களில் அவர் ஈடுபடமாட்டார்.
* அன்பு, ஆனந்தத்தை பிறருக்கு கொடுக்கும் வாய்ப்பு ஒவ்வொரு விநாடியும் வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* சில விஷயங்களில் நம் மனதில் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. எதிர்பார்ப்பு உண்டாகும் போது வாழ்வில் விருப்பு, வெறுப்பு தவிர்க்க முடியாததாகி விடும்.
* சாப்பாட்டின் முன் அமரும் போது, பரிமாறப்பட்டதை மகிழ்ச்சியோடும், நன்றியோடும் அன்போடும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
 சத்குரு ஜக்கி வாசுதேவ்

Read more...

ஆசைகளை முறைப்படுத்துங்கள்

நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள், நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லது. ஆனால், அவற்றில் ஒரு சில ஆசைகளை, நம்முடைய உடம்பால் ஏற்றுச் சமாளிக்க முடியாது. சில விருப்பங்களை ஈடேறச் செய்வதற்குப் போதுமான வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை.
* ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது நாம் ஏமாற்றத்தில் ஆழ்ந்து விடுவோம். இப்படி மனதைக் கீழ்நிலைக்குச் செல்லாமல் பக்குவப்படுத்த நம்மை தயார் செய்ய வேண்டும். ஆசைகளைக் குறைத்துக் கொள்வது அல்லது கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு முதல்படியாக அமையும்.
*முதலில் நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம். இரண்டாவதாக நம் ஆசைகள் பிறரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். மூன்றாவதாக இயற்கை நியதிகளை ஒட்டியதாக ஆசை இருத்தல் வேண்டும்.
* இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும். இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம். பரலோகத்திலும் நன்மைகளைப் பெறலாம்.
வேதாத்ரி மகரிஷி

Read more...

கட்டங்கள் அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க!

வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின் உள்ள பிரிவில் 'Display gridlines on screen' என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டுவாக்கிற்காகவும் படுக்கைவாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்

Read more...

இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!

சென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.
ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார். இதுவே, பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது.
முதலில் இந்த கருத்தினை டிம் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் இருந்தன. அவருடைய திட்டக் கருத்தினை அனைவரும் இது நடக்காத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர்.
ஆனால், அமெரிக்க இராணுவம் தன்னுடைய தேவைகளுக்காக, இந்த திட்டக் கருத்துரையைக் கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன் வந்தது. 1969 ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தினைச் செயல்படுத்தியது. அந்த திட்டம், இராணுவ நடைமுறைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிம் பெர்னர்ஸ் லீ தந்த திட்டம், பொதுமக்களுக்கானதாகும். எந்த சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களையும் ஒரு மைய வலையில் இணைத்து, ஒன்றுக்கொன்று பைல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் வகையில் அவரின் திட்டம் இருந்தது.
இந்த வகையில் இணையம் உருவாக்கப்பட்ட போது, அப்படியே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதைக் காட்டிலும், அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் CompuServe, பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணைய திட்டங்கள் இயக்கத்திற்கு வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தன. ஆனால், பெர்னர்ஸ் லீ கொடுத்த திட்டம், மக்களுக்கு இலவசமாக இணையத்தினைத் தருவதாக இருந்தது.
1990 ஆம் ஆண்டில், மின்னோஸ்டா பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணைய திட்டம் செயலாக்கத்தில் இருந்தது.
ஆனால், இதனை முறியடிக்கும் வகையில், அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், அரசின் துறைகள், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். Whitehouse.gov என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது. இதுவே இணையத்தை அரசு அங்கீகாரம் செய்தமைக்கு எடுத்துக் காட்டாகும்.
1993ல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப் பட்டது.
பெர்னர்ஸ் செயல்படுத்திய இணைய திட்டத்தில், பொது மக்கள் தாங்கள் விரும்பியதை, தங்களுடைய மற்றும் இணைய இணைப்பில் இருந்த கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால், அந்த நேரத்தில், இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடியும் என்று கற்பனையாகக் கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூகுள் மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை அவை தங்களின் சர்வர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும்.
இந்த கால கட்டத்தில் தான், பெர்சனல் கம்ப்யூட்டர் நம் வாழ்வின் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது. இணையவலையில் உள்ள பைல்களை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற செயல்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இசை, திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தன. யார் வேண்டுமானாலும், எதனையும் கேட்டு பயன் பெறலாம்; அவர்களே பதிப்பிப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, இத்தகைய தகவல்களை வழங்கும் தொழில் பிரிவுகள் தங்களின் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. தொடர்ந்து இந்த நிலை பல தொழில் பிரிவுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
ஆனாலும், இணைய வலை மக்களுக்குத்தான் அதிக சக்தியை வழங்கியது. அவர்களே அனைத்து பிரிவுகளின் எஜமானர்களாக மாறினர். அரசு குறித்த விமர்சனங்கள் அனைவராலும் தரப்பட்டன. எந்த அரசின் நடவடிக்கையும் மக்களின் கவனத்திற்கு மறைக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உருவான இணையம், அரசு மற்றும் அது போன்ற மையங்களுக்கு சில பாதுகாப்பு வசதிகளை அளித்தது. சிலவற்றை மக்களுக்குத் தெரியாமல் இவை அமைத்தன. இருந்தும் மக்கள் இணையம் தரும் சக்தியை உணர்ந்தே உள்ளனர். இன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுக முடியும் என்ற நிலை மக்களுக்கு அளவற்ற சக்தியையும், சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்க, மறுக்க முடியாது.
இன்று இணையம் முழுமையாகத் தன் இலக்குகளை ஈடேற்றிவிட்டதா? என்ற கேள்விக்கு நிறைவான பதிலைத் தர இயலவில்லை. தொடக்க கால இலக்குகளில் பாதி அளவு தான், இந்த வைய விரி வலை எட்டியுள்ளது. இன்னும் பாதி அளவு அமைக்கப்பட வேண்டும். அது அமைக்கப்பட்டே ஆகும் என எதிர்பார்க்கலாம்

Read more...

திருநீறு அணிவது ஏன்!

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
சத்குரு ஜக்கிவாசுதேவ்

Read more...

முகத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

Thursday, March 20, 2014

வேப்பிலை ஒரு கிருமிநாசினி. இந்த வேப்பிலையானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இது பல சரும நோய்கள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. இந்த வேப்பிலையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் செய்வதென்று பார்க்கலாம்.

• கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் அதன் இலையை அரைத்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 - 20  நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

• முகப்பரு இருப்பவர்களுக்கு வேப்பிலை பவுடருடன், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், இரண்டு நாட்களில் பருக்கள் படிப்படியாக குறைய தொடங்கும்.

• வேப்பிலையை நன்கு அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த ஒரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கினால், இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதை தடுக்கும். வேண்டுமெனில் இதனை பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.

•சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேப்பிலை பொடியுடன் பால், எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• ஒரு பௌலில் வேப்பிலைப் பொடி, துளசி பொடி மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, நன்கு ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தடுத்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்

Read more...

மனத்தூய்மை வாழ்வு தரும்

* நான் யார்? என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும். எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடம் ஏது?
* உடல் அளவில் குறுக்கிக் கொண்டிருக்கும் போது, நான் வல்லவன், செல்வந்தன், பெரியவன், அழகன் என்ற தற்பெருமை உண்டாகிறது. அல்லது ஏழை, நோயாளி என்ற தாழ்வு நிலை உண்டாகிறது. யாரோடும் ஒப்புமை இல்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்துவிட்டால் தற்பெருமை உண்டாகாது.
* நானே பிரம்மாக இருக்கிறேன். பிரம்மமே எல்லாமாக இருக்கிறது என்று உணரும்போது, எதன் மீது ஆசை கொள்வது? பற்று வைப்பது? அந்நிலையில் நான் என்னும் அகப்பற்று, எனது என்ற புறப்பற்றுகள் நம்மை விட்டு விலகுகின்றன.
* தன்னை அறிந்த நிலையில் உள்ளுணர்வில் அன்பும் அறிவும் பிறக்கிறது. அந்நிலையில் ஞானிகள் எல்லாம் சொல்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. அப்போது அறிவில் பூரணத்துவமும், அடக்கமும், அமைதியும் உண்டாகும். மனம் அத்தூய்மையான நிலையில் இவ்வுலகம் முழுமைக்கும் வாழ்வு தரும் நிறைநிலையைப் பெறுகிறது.
வேதாத்ரி மகரிஷி

Read more...

ஆசைகளை சீர்படுத்துங்கள்

ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.
* உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கியநிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.
* தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
* உண்மையில் எதிரி ஒருவன் நமக்கு இருக்கிறான் என்றால் அது நம் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே. ஒருமுறை நம் மனதிற்குள் தீய எண்ணத்தை அனுமதித்தால் அதை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
* ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
வேதாத்ரி மகரிஷி

Read more...

எண்ணெய் வழியும் முகமா?

சிலருக்கு எண்ணெய் வழியும் முகமாக இருக்கும். அதனால் தங்கள் அழகு பாதிக்கப்படுவதாக நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எண்ணெய் பசையை நீக்க என்ன செய்யலாம் என்ற குறிப்பு இதோ...

* வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளிப் பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்புக்குப் பதில் கடலை மாவு பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாகக் காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தில் மோர் தடவி சிறிதுநேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம்பழச் சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

* சோள மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.

* எண்ணெய் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். அப்போது, அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

* எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சமஅளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாகக் கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிதுநேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாகப் பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

Read more...

ஸீ கேட் நிறுவனத்தின் புதிய 5 டெரா பெட் ட்ரைவ்

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ட்ரைவ் -Hard disk தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஸீ கேட் நிறுவனம், தன்னுடைய புதிய 5 டெரா பைட் கொள்ளளவு கொண்ட ட்ரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது 5 பிளாட்டர் கொண்டு, 7.200 ஆர்.பி.எம். வேகம் கொண்டதாக உள்ளது

Read more...

ஏ.ஐ.ஓ (AIO) சாதனங்கள்

பல சாதனங்களின் பயன்பாட்டினை உள்ளடக்கி ஒரே சாதனத்தில் தரும் சாதனத்தினை AIO (All in One) சாதனம் என அழைக்கிறோம். இது ஒரு ஹார்ட்வேர் சாதனமாகும். ஏ.ஐ.ஓ. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் கீ போர்ட் மற்றும் மவுஸ் தவிர, மற்ற அனைத்து சிஸ்டம் பகுதிகளும் மானிட்டரிலேயே இணைக்கப்பட்டிருக்கும். சி.பி.யு. என தனியே கேபினட் இருக்காது. அதில் இருப்பவை அனைத்தும் மானிட்டரில் இருக்கும். ஏ.ஐ.ஓ.பிரிண்டர்கள் இப்போது பரவலாகப் புழக்கத்தில் உள்ளன. இவை பிரிண்டிங், ஸ்கேனிங், நகலெடுத்தல், பேக்ஸ் செய்தல் என அனைத்து சாதனங்களையும் உள்ளடக்கியதாக உள்ளன

Read more...

நல்லதற்கே மனதில் இடம்

மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனிதனிடமே இருக்கிறது.
* எல்லாருக்கும் நன்மை தரும் நல்ல விஷயங்களுக்கு மனதில் இடம் அளியுங்கள். எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்தால் விரும்பியதை அடைய முடியும்.
* தேவையான இடத்தில் நீங்கள் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் ஒருவரைத் திருத்தும் நோக்கில் மட்டுமே வெளிப்பட வேண்டும்.
* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் ஞானம் வந்து விட்டது என்று பொருள்.
* இறைவனை முழுமையாகச் சரணடைந்து விட்டால் மனதில் ஆணவம் உண்டாகாது.
* ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தலாம். அதனால், அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரத் தொடங்கிவிடும்.
* வீட்டில் அன்பு, அருள் நிறைந்த நல்லவர்களின் உருவப்படங்களை மாட்டி வையுங்கள். இதன்மூலம் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும்.
 வேதாத்ரி மகரிஷி

Read more...

உலகமே வசப்படும்

அறிவுநிலையில் உயர்ந்தவர்கள், எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பார்கள்.
* எந்த நிலையிலும் ஒருவனுக்கு கோபம் எழவிட்டால், அவன் ஞானநிலையை பெற்று விட்டான் என பொருள்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.
* தவறான எண்ணங்களை தவிர்க்க விரும்பினால், நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் அனுமதியுங்கள். மனதை உயர்த்திக் கொண்டு விட்டால், எல்லையில்லா இன்பம் உண்டாகும்.
* உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அது மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணம் தான்.
* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுத்து விடும்.
* இன்மொழி பேசுபவனுக்கு இந்த உலகமே வசப்படும். வாழ்வு வெற்றிகரமானதாகி விடும்.
வேதாத்ரி மகரிஷி

Read more...

பக்திக்கு முக்கியமாகும் சக்தியின் மந்திரங்க

Sunday, March 16, 2014

‘அதைச் செய்ய உனக்குச் சக்தியிருந்தால் செய். இல்லையேல், சிவனேயென்று இரு’. இந்த வாக்கியத்தை நாம் அன்றாட வாழ்க்கையில் பலமுறைகள் பேசியும், கேட்டும் இருப்போம். அதாவது, ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்றால் ‘சக்தி’ என்ற செயல்திறன் தேவையாக உள்ளது. அது, உடல் திறனையோ, மன திறனையோ குறிப்பிடக்கூடிய ஒரு சாதாரணச் சொல்லாக இருந்தாலும்கூட, அதன் உள்ளார்ந்த அர்த்தம் இயற்கைக்கும் நமக்கும் உள்ள ஒத்திசைவையின் அளவீட்டையே குறிக்கிறது. அந்த ஒத்திசைவு மனிதர்களுக்கிடையேயானாலும் சரி, அணுவுக்குள் சுற்றும் மூலக்கூறுகளுக்கு இடையேயானாலும் சரி, அல்லது உலக நாடுகளுக்கிடையேயானாலும் சரி, எல்லாவற்றிற்குமான ஒரு நிச்சயத் தேவையாகவே அது உள்ளது. அந்த ஒருங்கிணைப்புத் திறனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் நம்முடைய ஆன்மிகச் சடங்குகள் எவ்வாறு கொண்டு செல்கின்றன என்பதை ஆன்மிக அறிவியல் நோக்கில் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்.

நமது ஆன்மிகத்தில் இறையை பெண்மையின் போற்றத்தக்க வடிவத்தில் வணங்கக் கூடிய முறையை ‘சாக்த நெறி’ என்று குறிப்பிடுவார்கள். ‘ஸர்வம் சக்தி மயம் ஜகத்’ என்று சாக்த நெறி பூரிப்புடன் குறிப்பிடும். ஒரு ‘அணுவுக்குள் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்’ என்று மூன்று விதமான துகள்கள் அடங்கியிருப்பதைப்போல், சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்றுவித சக்திகளின் ரூபங்கள் வழிபாட்டில் உள்ளன. அவை படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முக்குண இயல்புகளால் வடிவம் பெற்றவை. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்ற அவர்களை வழிபடுமுறைகளில் பலவிதம் பரவி நிறைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொங்கல் வைப்பது, முடியிறக்கம் செய்வது, அலகு குத்துவது, அக்னிச் சட்டி எடுப்பது, தீ மிதிப்பது, என்று வழிபாட்டின் பலவித வடிவங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகியிருக்கின்றன. ஆனால், இவை யாவும் பண்படாத மன எழுச்சியின் முரண்பாடான வெளிப்பாடுகள் என்றே நவீன கால நாகரீகப் புதுமைவாதிகள் மேலோட்டமாக வாதிட்டு வருகின்றனர். தற்கால வாழ்வில் உள்ள சிக்கலான பலவித வாழ்வியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒருவர் தமது நேரத்தையும், பொருளையும், சக்தியையும் பயன்படுத்துகிறாரென்றால் அவ்விஷயம் அவருக்கு தனிப்பட்ட வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையின் ஆழமான பின்னணி அதிலுள்ளது என்பதை நாம் உணரலாம்.

சாக்த மந்திரங்களில் நாம் காணும் முதலாவது மந்திர ஸ்துதி ‘ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்’. இது, பதினெண் புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் வருகிறது. அதில் ஹயக்ரீவருக்கும், அகத்தியருக்கும் இடையே நடந்த உரையாடலில் விளைவாக ‘ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்’ என்ற மகத்தான ‘சாக்தக் கனி’ நமக்கு கிடைத்தது. ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியை வெள்ளிக்கிழமைகளிலோ, அல்லது அஷ்டமி திதிகளிலோ, தசாங்க தூபமிட்டு, பால்பாயசம் நிவேதனம் செய்து, தாம்பூலம் முதலான பொருட்கள் சமர்ப்பித்து, மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால், சகல விதமான நன்மைகளும் இல்லத்தில் துள்ளி விளையாடும்.

‘அமுதத்தை உண்ட தேவர்களோ அடிக்கடி துன்ப, துயரங் களுக்கு ஆளானார்கள். ஆனால், அவர்களைத் தவிக்கவைத்த, ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானோ நித்ய கல்யாணசுந்தரேஸ்வரராக, திருநீலகண்டராக பொலிவுடன் விளங்க அன்னை உமாதேவியின் பதிபக்தியே காரணம்’ என்று ஆதிசங்கரர் தமது சவுந்தர்ய லஹரியில் குறிப்பிடுவார். அத்தகைய மங்களகரமான சவுபாக்கிய காரணியான லலிதாம்பிகையை, அவளது மந்திரம் கொண்டும் எளிய முறையில் பெண்கள் பூஜித்து வரலாம். இந்த மந்திரம் சகல நன்மைகளையும் குடும்பத்தினர் அனைவருக்கும் தர வல்லது. மந்திரம் வருமாறு:–

‘ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம’  

இந்த மந்திரத்தைச் சுமங்கலிப் பெண்கள் யாவருமே வீட்டிலோ, கோவிலிலோ தினமும் 27 முறைகள் ஜபித்து வருவது குடும்பத்தில் சகல சவுபாக்கியங்களையும் ஏற்படுத்தும். மேலும், அவர்களது வாக்கில் ஒரு அபூர்வமான வசிய சக்தியையும் உண்டாக்கி வைக்கும். 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் யாவருமே இதை உச்சாடனம் செய்வதால் தோற்றத்தில் ஒரு பொலிவும், கல்விக் கேள்விகளில் நல்ல தேர்ச்சியும் உண்டாகும்.

அடுத்து, வருவது அன்னை மூகாம்பிகையின் தெய்வீகத்தன்மையை நமது அனுபவப்பூர்வமாக உணர வைக்கக்கூடிய அற்புதமான மூல மந்திரமாகும். இதில் ஐம் என்ற பீஜமானது மாயையை விலக்கி, உள்ளதை உள்ளவாறே உணரவைக்கக் கூடிய உன்னதமான ஸாரதாவித்யா மகா சக்தியின் பீஜாட்சரமாகும். அது நான்கு முறைகள் இதில் பிரயோகிக்கப்பட்டிருப்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இதன் வடிவமைப்பு பூரண ஞான நிலையை வழங்கும் தன்மையானது.

சர்வஞானபரமேஸ்வரியான உலக அன்னையின் மூலமாக, சகல ஞானமகாகாரணாதிகளின் தோற்றமாக உள்ளவற்றின் உண்மையான இயல்பை நமது ஞானக் கண்களுக்குக் காட்டியருளும் நன் மந்திரமே இது. இந்த ஜகத்ஜனனியின் அரிய மந்திரத்தைப் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் ஆரம்பித்துத் தினமும் 32 முறைகள் ஜபம் செய்துவர கல்விக்கேள்விகளில் சிறப்புறுவதை உணரலாம்.

அடுத்து நாம் காணவிருப்பது ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரியின் மீதமைந்த, துயர் நீக்கும் உயர் மந்திரமாகும்.

‘ஓம் தும் துர்காயை நமஹ’

என்ற இந்த மந்திரம், சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படும் சக்திபடைத்த அன்னையின் ஆற்றல் மிக்கதாகும். அதுவும் ராகு காலங்களில் இதன் சக்தி பூரணமாக வெளிப்படும். சகலவித சர்ப்ப, விஷ தோஷங்களையும் இம்மந்திரம் துடைத்தெறியக்கூடியது. உபவாசமிருந்து முறையாக உச்சாடனம் செய்வோர்கள் வாழ்வின் எதிர்மறை அனுபவங்கள் யாவும் அவர் இருக்கும் திசைப்பக்கம் கூட வாராது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரக்கூடிய ராகு காலங்களில், அன்னையின் திருக்கோவிலில் அவள் திரு முன்பு அமர்ந்து 27 அல்லது 108 முறைகள் ஜபம் செய்பவரது வாழ்வில் பூர்வகர்ம தோஷத்தால் வரும் சகல சங்கடங்களும் நிச்சயம் விலகி விடும். கூடுதலாக 54 அல்லது 108 எலுமிச்சம்பழத்தை இந்த மந்திரத்தைச் சொல்லியபடியே, ஒரு சிவப்பு அல்லது மஞ்சள் நூலில் மாலையாகக் கோர்த்து ராகு காலங்களில் தேவியின் திருக்கழுத்தில் செவ்வரளி மாலையுடன் சேர்த்து அணிவித்தால் வம்பு, வழக்குகள் யாவும் வந்த வழியே திரும்பி ஓடியே போய் விடும்.

அடுத்து ஸ்ரீகாளி தேவியின் அம்சத்தை உபாசனை செய்து நலம் பெறும் வகையில் அமைந்த ஒரு மந்திரத்தைக் காணலாம். இது ராகுவின் நட்சத்திரங்களிலும், ராகு காலங்களிலும் பிறந்தவர்களுக்கு மிகவும் நலம் புரியும்.

‘ஓம் ஸ்ரீ மஹா காளிகாயை நமஹ’

இதைத் தினசரி வழிபாட்டில் பூஜை புனஸ்காரங்களோடு இணைத்துச் சொல்லி வரலாம். அல்லது தனிப்பட்ட வழிபாடாகவும் செய்து வரலாம். புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், மந்திரம், ஆராதனை என்ற வகையில் வழிபாட்டை அமைத்துக் கொள்ளலாம்.

அன்னை மகாசக்தியின் வழிபாட்டு முறைகளையோ, மந்திரங்களையோ சொல்ல முயன்றால் அது கடல்நீரை ஒரு குவளையில் அள்ளுவதாகவே அர்த்தம். எனவே இங்கு நாம் கண்டவற்றை அணுவினும் நுண்ணியதாகவே கருத வேண்டும்.

அர்த்தம் மிகுந்த நேர்த்திக்கடன்கள்

 பொங்கல் வைப்பதின் நோக்கம், ஒரு விருப்பம் நிறைவேறியதன் வெளிப்பாடேயாகும். மேலும், தெய்வ காரியத்தை மையமாக வைத்து, யாவரும் தெய்வத்தின் குழந்தைகளே என்று உணர்வுப்பூர்வமாகப் பங்கு கொள்வதால், சமூக ஒற்றுமை வளர அது ஒரு காரணமாகிறது. பொங்கல் பொங்கி வழிவது போன்று, வாழ்வில் இனிமை நிறையட்டும் என்ற ஆன்மிக மனோதத்துவத்தின் வெளிப்பாடே இந்நிகழ்வு.

அலகு குத்துவது நமது பார்வைக்கு வேண்டுமானால் மிகவும் அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதை வலியுடன் தாங்கக் கூடிய அவசியத்தின் பின்னால் என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். வாழ்வில் நிற்கதியாக நிற்கும் ஒரு குடும்பத்தலைவனின் அல்லது ஒரு தனிமனிதனின் துயரமான காலங்களில், சக மனிதர்களின் அன்பும் ஆதரவும் அற்ற நிலையில், வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்காமல், ஏதாவதொரு சக்தி நம்மை மீட்காதா? என்ற ஆழ்ந்த மன ஏக்கத்தின் வெளிப்பாடான தமது பிரார்த்தனை நிறைவேறியதன் காரணமே இருக்க முடியும். தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் தைப்பூசத் திருவிழாவன்று காவடி, பால்குடம், அலகு குத்துதல் போன்ற சடங்குகள் உண்டு. மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தைப்பூசம் அன்று பொது விடுமுறையாகும்.  

 அடுத்து தீ மிதித்தல் என்ற சடங்கு அம்மனின் திருவிழாவில் பல இடங்களில் பிரசித்தம். தீ மிதித்தலுக்கு முன்பு 21 நாட்களோ, 12 நாட்களோ, அல்லது ஒரு வாரமோ தீ மிதிப்பவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது. உணவு, உடை, உறக்கம் ஆகிய அன்றாட வாழ்வுமுறைகளிலும் மனதிற்குக் கட்டுப்படான நெறிமுறைகளைப் பழக்கப் படுத்துகின்றனர். அதன் வழியாக உடலும் மனமும் சமச் சீர்மையைப் பெறுகின்றன. குளிப்பது, பேசுவது ஆகிய யாவிலும் பலவிதமான வரைமுறைகள் நடைமுறையிலுள்ளன. தீ மிதித்தலின்போது நமது காலின் கீழ் பகுதிகளில் உள்ள நரம்பு முனைகள் மின்தூண்டுதல்களைப் பெறுகின்றன.

 பஞ்சபூத மயமான நமது உடல் பஞ்சபூத சக்திகளின் நேரடித் தொடர்பில் இருப்பது அந்த விரத காலத்தில் மட்டுமே. அதாவது, செருப்பணியாமலிருப்பது நிலத்தின் தொடர்பாகும். தினமும் இருமுறை குளிப்பதும், திரவ ஆகாரங்களே அதிகம் எடுத்துக் கொள்வது நீரின் தொடர்பாகும். காற்று, ஆகாயம் இவையிரண்டும், உண்ணா நோன்பிலும், மவுன விரதத்திலும் அடங்குகிறது.

 முடியிறக்குதல் (மொட்டை போடுதல்) என்ற விஷயத்தில் பலவிதமான காரணகாரிய நுட்பங்கள் அடங்கியுள்ளன. அதை ஒரு புதிய ஆரம்பத்தின், தொடக்கமாகக் கொள்ளலாம். ஒரு குழந்தையின் ஒற்றைப்படை வயதுகளில் முடியிறக்குவது மரபாகும். மயிர்க்கால்களின் உறுதி பலப்படுவது ஒரு காரணமாக இருந்தாலும், சூழ்நிலையில் இருக்கும் தெய்வீகத்தன்மையை மூளையின் நரம்பு இயக்கங்களின் வாயிலாக உடல் முழுவதும் பரவ வழிவகை உண்டாவதே முக்கியக் காரணமாகும். முதலில், முதல் முடி அவரவரது குலதெய்வத்தின் சன்னிதியில் எடுப்பது வழக்கமாகும். ஒருவரது குலதெய்வமாகத் திகழும் தெய்வமூர்த்தமே அவர்களது பூர்வபுண்ணிய பலன்களை, குறைவின்றித் தரும் சக்தி படைத்ததாகும். பிறகுதான் அவரவரது இஷ்டதெய்வமோ, வழிபடு தெய்வமோ வழிபாட்டில் பங்குபெறுகின்றன. ஒருவரது பிறந்த நேரத்திற்கு உகந்த ஒரு நல்ல நாளில்தான் முடியிறக்கம் செய்ய வேண்டும்.

 அங்கப்பிரதட்சணம் செய்வது என்பது ஒருவருடைய உடலின் ஆறு ஆதார சக்கரங்களும் ஒரே நேரத்தில் கருவறைக்கருகில் உள்ள சக்தி மண்டலத்துக்குள் பூமி மூலமாகத் தொடர்பு கொள்ளும் நிலையாகும். ஏழாவது சக்கரமான சஹஸ்ராரமோ, கருவறையில் வீற்றிருக்கும் தெய்வ திருஷ்டியில் நேரடியாகப் படக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறது. ஒரு பொருளின் ஈரத்தன்மையானது அதன் மின் ஈர்ப்புத் திறனை அதிகப்படுத்தக்கூடியதாகும். ஈர உடையிலோ அல்லது ஈர நிலத்திலோ ஒருவர் அங்கப் பிரதட்சணம் வருவற்கான முக்கியக் காரணம் அதுவேயாகும்

Read more...

நல்லதற்கே மனதில் இடம்

நல்லதற்கே மனதில் இடம்
மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனிதனிடமே இருக்கிறது.

எல்லாருக்கும் நன்மை தரும் நல்ல விஷயங்களுக்கு மனதில் இடம் அளியுங்கள். 

எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்தால் விரும்பியதை அடைய முடியும்.

தேவையான இடத்தில் நீங்கள் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் ஒருவரைத் திருத்தும் நோக்கில் மட்டுமே வெளிப்பட வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் ஞானம் வந்து விட்டது என்று பொருள்.

இறைவனை முழுமையாகச் சரணடைந்து விட்டால் மனதில் ஆணவம் உண்டாகாது.

ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தலாம். அதனால், அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரத் தொடங்கிவிடும்.

வீட்டில் அன்பு, அருள் நிறைந்த நல்லவர்களின் உருவப்படங்களை மாட்டி வையுங்கள். இதன்மூலம் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும்.
வேதாத்ரி மகரிஷி ஆன்மிக சிந்தனைகள்

Read more...

அறிவால் வெல்லுங்கள்

* உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு. ஆனால், அறிவால் உணர்ச்சியை வென்றால் வாழ்வு உயரும்.
* திறமையின்மையும், அச்சமும் கவலையை வளர்க்கும் இருபண்புகள்.
* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் கிடையாது. தீர்க்கும் வழியை                    அறியாதவர்களாகப் பலர் இருக்கிறார்கள்.
* பகைமை உணர்வு உள்ளத்தில் இருக்குமானால், ஒருவரை வாழ்த்த முடியாது.
* கற்பு என்பது ஆண், பெண் இருவரும் உயிரை விட மதிக்க வேண்டிய மேலான ஒழுக்கம்.
- வேதாத்ரி மகரிஷி

Read more...

BSNL MOBILE 2G/3G Data tariff

2G/3G BSNL Mobile Data tariff 
DATA14-100 MB-3days
DATA35-240 MB-7 days
DATA78-500 MB-15 days
DATA96-700 MB-21 days
DATA139-1 GB-30 days
DATA253-2 GB-30 days
DATA561-5 GB-30 days
DATA601-3000 MB-90 days
DATA1011-10 GB-30 days
DATA3302-30000MB MB-90 days
net balance check செய்ய
*124*1#  

Read more...

திசைகளின் தெய்வம்

வடக்கு     –     குபேரன்
மேற்கு     –     வருணன்
வடமேற்கு     –     வாயு
வடகிழக்கு     –     (ஈசான்யம்) குரு
தெற்கு     –     எமன்
தென்மேற்கு     –     நிருதி
கிழக்கு     –     இந்திரன்
தென்மேற்கு     –     சுக்ரன் (அக்னி)

Read more...

உலகமே வசப்படும்

அறிவுநிலையில் உயர்ந்தவர்கள், எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பார்கள்.
* எந்த நிலையிலும் ஒருவனுக்கு கோபம் எழவிட்டால், அவன் ஞானநிலையை பெற்று விட்டான் என பொருள்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.
* தவறான எண்ணங்களை தவிர்க்க விரும்பினால், நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் அனுமதியுங்கள். மனதை உயர்த்திக் கொண்டு விட்டால், எல்லையில்லா இன்பம் உண்டாகும்.
* உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அது மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணம் தான்.
* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுத்து விடும்.
* இன்மொழி பேசுபவனுக்கு இந்த உலகமே வசப்படும். வாழ்வு வெற்றிகரமானதாகி விடும்.
 வேதாத்ரி மகரிஷி

Read more...

சைவமாக மாறுவது ஆரோக்கியத்துக்கு நல்லது'

Saturday, March 15, 2014

சைவமாக இருந்தால், ரத்தஅழுத்தம், உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைக்கப்படுகிறது. இதுபோன்ற பலன்களால், ரத்தநாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதுதவிர, உணவுப் பாதையிலும், ஜீரண சக்தி அதிகரிக்கிறது
சமீபத்தில் நடத்திய மருத்துவ ஆய்வில், அசைவம் சாப்பிடுவோரை விட, சைவம் சாப்பிடுவோரின் ஆயுட்காலம், நீண்டதாக உள்ளது என, கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டும்இன்றி, சைவமாக இருந்தால், ரத்தஅழுத்தம் குறைக்கப்படுகிறது. இத்துடன் உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைக்கப்படுகிறது. இதுபோன்ற பலன்களால், ரத்தநாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதுதவிர, உணவுப் பாதையிலும், சைவமாக இருப்போருக்கு ஜீரண சக்தி அதிகரிக்கிறது. சைவமாக உள்ள பெரும்பாலோருக்கு, மனக்கட்டுப்பாடும் உள்ளதால், அவர்கள் வாழ்க்கை முறையையும் சரியாக்கி கொள்கின்றனர். குறிப்பாக, உடற்பயிற்சி செய்து, உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுத்தும் மனநிலைக்கு மாறி விடுகின்றனர். எனவே, நீங்கள் தொடர்ந்து சைவமாக இருப்பது சிறந்த பழக்கம்

Read more...

ரத்தப் புற்றுநோய் பயங்கரமானதா?

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி? இதற்கான சிகிச்சையை, எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும்?
ரத்தப் புற்றுநோய், எல்லா தரப்பினரையும் பாதிக்கக் கூடியது. சிறுவர்களுக்கு வரும் நோயை, கீமோதெரபி கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். பெரியவர்களுக்கு, (20 முதல், 50 வயது வரையுள்ளோர்) புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
முதியோருக்கு, (55 முதல், 60 வயது) இந்நோய் வந்தால், 15 முதல், 20 சதவீதம் பேருக்கு, 'கீமோதெரபி' மூலம் குணப்படுத்தலாம். 'பல்லியேட்டிவ் ஹீதெரபி' அல்லது 'டிசீஸ் மாடிபிங் ஏஜென்ட்' போன்ற மருந்துகளால், நோய் தன்மையை குறைத்து, வாழ்வை நீடிக்க இயலும். அதனால், முதியோருக்கு நோயின் தன்மை மற்றும் (கோ மார்பிடிட்டி) பிறநோய்களின் தன்மையைப் பொறுத்தும், சிகிச்சை நிர்ணயிக்கப்படுகிறது.
வயது அதிகமாக இருந்தாலும் கூட, கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை (உடல் வலுவாக இருந்தால்) மாற்று அறுவை சிகிச்சை மூலம், ஒரு சிலரை குணப்படுத்தலாம்.
பெரும்பாலும், 60 வயதிற்கு மேற்பட்டவருக்கு, கீமோதெரபி அல்லாத முறையிலோ அல்லது குறைந்த அளவு கீமோதெரபி மூலமோ, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரத்தப்புற்று நோயின், தீவிர தன்மையை கண்டறிவது எவ்வாறு?
முன்னரே கூறியவாறு, கீமோதெரபி மட்டும் போதுமா அல்லது ஸ்டெம்செல் சிகிச்சை தேவையா என்பதை, கண்டறிய வேண்டும். இவ்வாறு கண்டறிந்து, ஓரிரு மாதங்களுக்குள் எந்த விதமான சிகிச்சை தேவைப்படும் என்பதை, முடிவு செய்ய வேண்டும்.
ஒரு, 'டிரான்ஸ்பிளான்ட்' மூலம், குணப்படுத்தக் கூடிய நோய்க்கு, வெறுமனே, கீமோதெரபி மட்டும் கொடுப்பதால் நேரமும், பணமும்தான் விரயமாகிறது. இதனால், கண்டிப்பாக நோயின் தீவிர தன்மையை முன்னரே கண்டறிவது முக்கியம்.
இது, எவ்வாறு அறியப்படுகிறது என்றால், அவருக்கு பண்ணப்படும் குரோமோசோம் மற்றும் மூலக்கூறு டெஸ்ட் மூலம், நோய் தன்மை அறியப்படுகிறது.
பின், அது, கீமோதெரபியால் குணப்படுத்த கூடிய நோயா அல்லது டிரான்ஸ்பிளான்டால் குணப்படுத்த கூடிய நோயா என்று அறியப்படுகிறது.
மேலும், நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது, அந்த நோய், எவ்வளவு வேகமாக குறைகிறது என்பதை, அறியும் வாய்ப்பு உள்ளது. இதற்கு, எம்.ஆர்.டி., (மினிமல் ரெசிடுயல் டிசீஸ்) என்று பெயர். எம்.ஆர்.டி., பரிசோதனை முறை, இந்தியாவிலேயே ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது நோயின் தன்மையை பொறுத்து தான், சிகிச்சை எவ்வளவு நாள் பெற வேண்டும் என்பது உள்ளது. பெரும்பாலும், ஏ.எல்.எல்., - ஏ.எம்.எல்., என, இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
அதற்குள், சிறு பிரிவுகளும் உண்டு. ஏ.எல்.எல்., என்பது, முதல் நான்கு வாரங்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
அதன்பிறகு, வெளிநோயாளியாகவே சிகிச்சை மேற்கொள்ளலாம். ஏ.எம்.எல்., என்ற நோய்க்கு, பெரும்பாலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
டாக்டர் ஆர்.சுதந்திர கண்ணன்,
கோவை

Read more...

விண்டோஸ் எக்ஸ்பியில் தொடர ஆண்டுக்கு ரூ. 1,190 கோடி!

இந்தியாவில் நிறுவனங்கள், குறிப்பாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோசாப்ட், எக்ஸ்பிக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவினை வரும் ஏப்ரல் 8 அன்று முடிவிற்குக் கொண்டு வருகிறது. இதன் பின்னரும், இந்நிறுவனங்கள், தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்த முடிவு செய்தால், அதற்காக ஆண்டுக்கு ரூ.1,190 கோடி செலவு செய்திட வேண்டியதிருக்கும் என எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

இந்தியாவில், பெரிய நிறுவனங்களில், ஏறத்தாழ 40 லட்சம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் எக்ஸ்பி சிஸ்டத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 84 சதவீத கம்ப்யூட்டர்கள், எக்ஸ்பியிலிருந்து வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிவிட்டன. மற்றவர்களில் பெரும்பாலானவை பொதுத் துறை நிறுவனங்களாக உள்ளன. மேலும் 6 சதவீத நிறுவனங்கள் எக்ஸ்பியிலிருந்து வரும் நாட்களில் மாறிக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவன உயர் அதிகாரி கோயல் தெரிவித்துள்ளார்

Read more...

ராசிக்கு ஆகாத திசை

Friday, March 14, 2014

ஒவ்வொருவரின் ராசியை பொருத்தும் அவர் குடியிருக்கும் வீட்டின் திசை அமைவது நல்லது. அதே சமயம் தங்களது ராசிக்கு ஆகாத திசைகளில் குடியிருப்பது கூடாது. எந்த ராசிக்கு, எந்த திசை ஆகாது என்பதைக் காணலாம்.

மேஷம்– வடக்கு
ரிஷபம்– மையப்பகுதி, 
மிதுனம்– மையப்பகுதி, 
கடகம்– தெற்கு, 
சிம்மம்– மையப்பகுதி, 
கன்னி– தென்மேற்கு,
 துலாம்– வடமேற்கு, 
விருச்சிகம்– கிழக்கு, 
தனுசு– மேற்கு, 
மகரம்– மையப்பகுதி, 
கும்பம்– வடகிழக்கு, 
மீனம்– தென்கிழக்கு

Read more...

விண்டோஸ் shortcut leys

Monday, March 10, 2014

எழுத்தை மாற்ற CARL+SHIFT+F
எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P
எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+>
எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<
எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]
எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[
பெரிய சிறிய எழுத்தாக மாற்ற SHIFT+F3
அனைத்தும் பெரிய எழுத்துக்களாக மாற்ற CTRL+SHIFT+A
எழுத்தை போல்ட் செய்திடவும் மாற்றவும் CTRL+B
அடிக்கோடினை அமைக்க, நீக்க CTRL+U
ஒரு சொல்லை அடிக்கோடிட CTRL+ SHIFT+W
சாய்வெழுத்து அமைக்க / நீக்க CTRL+I
எழுத்தை சிறிய கேபிடல் எழுத்தாக அமைக்க CTRL+SHIFT+K
தொகுப்பை மூட ALT+F4
அனைத்து விண்டோவினையும் சுருக்கி வைக்க W logo key+M
டெக்ஸ்ட் இரு கோடுகளில் அடிக்கோடிட CTRL+SHIFT+D
டெக்ஸ்ட்டை மறைக்க மீண்டும் கொண்டுவர CTRL+SHIFT+H
பைல் போல்டர் கண்டுபிடிக்க WINDOWS+F
ஆட்டோமேடிக் ஸ்பேஸிங் அமைக்க CTRL+=
தற்போதைய வேலையை நீக்க ESC
சிம்பல்(அடையாளக் குறி) எழுத்துக்கு மாற CTRL+SHIFT+Q
அச்சில் வராத குறிகளைக் காண CTRL+SHIFT+*

Read more...

விநாயகர் திருநாமங்கள்

Sunday, March 09, 2014

நூற்றுக்கணக்கில் விநாயகர் இருந்தாலும், சாஸ்திரப்படி மொத்தம் முப்பத்து இரண்டு வகையாக அவர் பிரிக்கப்படுகிறார். அவை:

1. சங்கட ஹர விநாயகர்
2. பால விநாயகர்
3. தருண விநாயகர்
4. பக்தி விநாயகர்
5. வீர விநாயகர்
6. சக்தி விநாயகர்
7. துவிஜ விநாயகர்
8. சித்தி விநாயகர்
9. உச்சிஷ்ட விநாயகர்
10. விக்ன விநாயகர்
11.  க்ஷிப்ர விநாயகர்
12.  ஹேரம்ப விநாயகர்
13. லட்சுமி விநாயகர்
14. மஹா விநாயகர்
15.விஜய விநாயகர்
16. நிருத்ய விநாயகர்
17. ஊர்த்துவ விநாயகர்
18. ஏகாட்சர விநாயகர்
19.  வர விநாயகர்
20. திரயாக்ஷ்ர விநாயகர்
21. க்ஷிப்ர பிரசாத விநாயகர்
22. ஹரித்திரா விநாயகர்
23. ஏக தந்த விநாயகர்
24. சிருஷ்டி விநாயகர்
25. உத்தண்ட விநாயகர்
26. இரணமோசன விநாயகர்
27. துண்டி விநாயகர்
28. துவிமுக விநாயகர்
29. மும்முக விநாயகர்
30. சிங்க விநாயகர்
31. துர்க்கா விநாயகர்
32. யோக விநாயகர்

Read more...

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP