பார்த்த,படித்த செய்திகள்

பதட்டம் கூடவே கூடாது

Wednesday, March 26, 2014

சூரிய உதயத்துக்கு முன்னால் விழிப்பது சிறந்த பழக்கம். அதிகாலையில் கடவுளைத் தியானம் செய்தல் அவசியம். பின்னர் காலைக்கடன்களை முழுமையாக செய்தல் வேண்டும். இளம் வெயிலில் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* இளம்வெந்நீரில் அழுக்கு தீர தேய்த்துச் சுத்தமாக குளித்தல் வேண்டும். காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணிதல் வேண்டும்.
* குளித்தபின் கடவுளை சிறிதுநேரம் வணங்க வேண்டும். பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். வேகவேகமாகவோ அல்லது சோம்பேறித்தனத்துடன் மிக நிதானமாகவோ சாப்பிடக்கூடாது. சாப்பிட்டு முடிந்தவுடன் வெந்நீர் அருந்த வேண்டும்.
* கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவற்றை கனவிலும் நினைக்கக் கூடாது. புகை, கள் போன்ற தீய பழக்கங்களையும் அறவே தவிர்க்கவேண்டும். பதட்டத்தோடு எச்செயலையும்
அணுகுதல் கூடாது. இவற்றை விலக்காவிட்டால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியாது.
* நல்லோர் மனதை நடுங்க செய்யும் காரியத்தை கைவிடுங்கள். நம்பியவர்களை நட்டாற்றில் கை கழுவி விடாதீர்கள். ஆசை காட்டி, யாரையும் மோசம் செய்யாதீர்கள். யாரையும் அவமதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள்.
 வள்ளலார் 
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP