எண்ணம் செயலாகட்டும்
Wednesday, March 26, 2014
* வெளியே வெளிச்சம். உள்ளே இருட்டு என்று மனிதன் வாழ்வது கூடாது. உள்ளும் புறமும் தூய்மையுடன் இருக்க வேண்டும்.
* கருணை உள்ளத்தில் ஊற்றாய் பெருகட்டும். உடம்பெங்கும் வழிந்தோடட்டும்.
* எங்கு அன்பு நெஞ்சம் இருக்கிறதோ, அங்கு தான் கடவுளும் இருக்கிறார் என்பதை உணருங்கள்.
* பக்தியால் கண்ணீர் பெருக்குங்கள். அந்த கண்ணீரால் உடம்பு மட்டுமின்றி உள்ளமும் நனையட்டும்.
* உள்ளத்தில் நல்லதை ஆழமாக எண்ணுங்கள். எண்ணியதை நிறைவேற்ற உடனே செயல்படுங்கள்.
வள்ளலார்
0 comments:
Post a Comment