உத்தமரோடு உறவு கொள்!
Wednesday, March 26, 2014
* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு.
* உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.
* நல்ல எண்ணத்தோடு இருங்கள். அதுவே நடத்தையைப் பாதுகாக்கும்.
* பசித்தோர் முகம் கண்டு இரக்கம் கொள்ளுங்கள். உயிர்களிடம் கருணையுடன் இருங்கள்.
* மனம் ஒன்றி கடவுளின் திருவடியை நினைக்கும் உத்தமரின் உறவு நன்மையளிக்கும்.
* பொய், பொறாமை, கபடம் போன்ற தீய குணங்களை கடவுள் வழிபாட்டால் மட்டுமே அகற்ற முடியும்.
வள்ளலார்
0 comments:
Post a Comment